ஐரோப்பா

06 ஆண்டுகளுக்கு பின் பிரிட்டன் திரும்பிய ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர்

ஹாரி மற்றும் மேகன் தம்பதியினர் இன்று மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

06 ஆண்டுகளுக்கு முன் அரசு குடும்ப அந்தஸ்த்தை துறந்த இந்த தம்பதியினர்  அமெரிக்காவிற்கு குடிப்பெயர்த்திருந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவரும் தங்களின் குடும்பத்துடன் மீளவும் பிரித்தானியா திரும்பவுள்ளதாகவும், அங்கு சாதாரண வாழ்க்கையை வாழவுள்ளதாகவும் ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதற்கமைய இன்றைய தினம் அவர்கள் மீளவும் பிரித்தானியா திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்களுடைய குழந்தைகளான, 7 வயதான இளவரசர் ஆர்ச்சி மற்றும் 5 வயதான இளவரசி லில்லிபெட், செப்டம்பர் மாதம் பிரித்தானியாவில் உள்ள பாடசாலையில் கல்வி நடவடிக்கையை  தொடங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அவர்கள் எங்கு தங்குவார்கள் அல்லது குழந்தைகள் எந்தப் பள்ளியில் படிப்பார்கள் என்பது குறித்த துல்லியமான விவரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், அவர்கள் அரச இல்லத்தில் வசிக்கவோ அல்லது அதிகாரப்பூர்வ கடமைகளைச் செய்யவோ மாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்