டெல்லியில் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் அறிவிப்பு
டெல்லியில் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த அரசாங்கம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
அரசாங்கத் தரவுகளின்படி, நவம்பர் 1 முதல் பிப்ரவரி 15 வரையான காலப்பகுதியில் காற்றின் தரம் மோசமடைவதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி தனியார் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கமிழக்கச் செய்வதற்காக வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை இரட்டிப்பாக்குதல், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மாற்று நேரங்களில் செயல்படுதல், மற்றும் அத்தியாவசிய பொது உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தவிர மற்ற அனைத்து வெளிப்புற சிவில் கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதித்தல் ஆகிய உத்தரவுகளை அரசாங்கம் பிறப்பித்துள்ளது.
அதேநேரம் நவம்பர் 1 முதல் ஜனவரி 31 வரை, அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் தங்களது பாதி ஊழியர்கள் நேரடியாகப் பணியில் இருக்கவும், மீதிப் பேர் வீட்டிலிருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விதிமீறுபவர்கள் மீது வழக்குத் தொடர்வது உள்ளிட்ட தண்டனை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய கொள்கையின் ஒரு பகுதியாக, தங்களது பழைய வாகனங்களை மின்சார வாகனங்களுக்காக (EVs) கைவிட விரும்பும் கார் உரிமையாளர்களுக்கு $1,000-க்கும் அதிகமான ரொக்க ஊக்கத்தொகையை அரசாங்கம் இந்த வாரம் அறிவித்துள்ளது.





