அரசியல் இலங்கை செய்தி

ஜனாதிபதி, பிரதமருக்கிடையில் பனிப்போர்?

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜே.வி.பியிலும், பிரதமர் ஹரினி அமரசூரிய தேசிய மக்கள் சக்தியிலும் இருக்கின்றனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், தனக்கும் இடையில் பனிப்போர் நிலவுவதாக வெளியாகும் தகவல்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அடியோடு நிராகரித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு நிராகரித்தார்.

இது தொடர்பில் பிரதமர் மேலும் கூறியவை வருமாறு ,

“ தேசிய மக்கள் சக்திக்கும், ஜே.வி.பிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கதைகள் கூறப்பட்டுவருகின்றன. இது எதிரணிகளின் எதிர்பார்ப்பாகும். ஆனால் உண்மை அதுவல்ல.

தேசிய மக்கள் சக்தியாக நாம் ஒற்றுமையாக செயல்பட்டுவருகின்றோம். தேசிய மக்கள் சக்திக்குள்தான் ஜே.வி.பியும் இருக்கின்றது.

ஜனாதிபதிக்கும், எனக்கும் இடையில் பனிப்போர் எனவும் கூறுகின்றனர். எனக்கு ஆதரவாக குழுவொன்று உள்ளது எனவும் கூறப்படுகின்றது.

எதிரணிகள் வங்குரோத்து அடைந்துவிட்டது என்பதற்கு இப்படியான கட்டுக்கதை பரவல் சிறந்த சான்றாகும்.” – என்றார் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய .

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை