ஐரோப்பா

கீவின் தொடர் தாக்குதல் – கிரிமியா தீபகற்பத்தில்  பெட்ரோல் விற்பனை இடைநிறுத்தம்

ரஷ்யாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள  கிரிமியா தீபகற்பத்தில்  பெட்ரோல் விற்பனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 9:00 மணி முதல், கிரிமியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களில் தனிநபர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களுக்கான ரொக்கம், ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் மற்றும் பற்றுச்சீட்டுகள் மூலமான எரிபொருள் விற்பனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

“கிரிமியா குடியரசின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே எரிபொருள் விற்கப்படும்,” என்று அப்பகுதியின் தலைவர் செர்ஜி அக்சியோனோவ் (Sergey Aksyonov) தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் குடியிருப்பாளர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ரஷ்யாவின் எரிசக்தித் துறையை கீவ் குறிவைத்திருப்பது கிரிமியாவில் ஒரு பெரிய எரிபொருள் நெருக்கடியைத் தூண்டியுள்ளது, இதனால் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகளும், குறைந்த அளவிலான விநியோகமும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்