சர்வதேச அணுசக்தி முகமை அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது – ஈரான் குற்றச்சாட்டு
சர்வதேச அணுசக்தி முகமை அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பகாயி (Baghaei) , ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் ஏவுகணை
நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடுவது, சர்வதேச அணுசக்தி முகமையின் அதிகார வரம்பிற்குள் வராது என்று தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“சரிபார்ப்பதே சர்வதேச அணுசக்தி முகமையின் பணியென சுட்டிக்காட்டிய அவர் அரசியல் பிரச்சாரம் செய்வது அல்ல
என குறிப்பிட்டுள்ளார்
மேலும், “அரசியல் நோக்கங்களுக்காக தொழில்முறை நடுநிலைமை பாதிக்கப்படும்போது, அந்த அமைப்புகள் தங்களது நம்பகத்தன்மையையும் செயல்திறனையும் இழக்கின்றன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்தக் கருத்து, அணு திட்டம் மற்றும் பிராந்திய பதற்றங்கள் தொடர்பாக IAEA வெளியிட்டு வரும் கருத்துகளுக்கு எதிரான புதிய விமர்சனமாக பார்க்கப்படுகிறது.



