இலங்கை

இலங்கையில் முழுவதும் 50 ஆயிரம் போலி வைத்தியர்கள் சேவையில் உள்ளதாக தகவல்!

நாடு முழுவதும் சுமார் 50,000 போலி மருத்துவர்கள் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை ஒழுங்குபடுத்துவதற்கு சுகாதார அமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய சங்கம் தெரிவித்துள்ளது.

அங்கு பேசிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயலாளர் டாக்டர் பிரசாத் ஹேரத், ஒவ்வொரு நகரத்தின் முக்கிய கிராமங்களிலும் தோராயமாக மூன்று முதல் நான்கு போலி வைத்தியர்கள் உள்ளனர்.

சில மருந்துக் கடைகளின் செயற்பாடுகள் சுகாதாரத் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.

நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்குவதால் நோயாளிகள் உயிரிழக்க கூட வாய்ப்புள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக முறையான ஒழுங்குமுறை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் வலியுறுத்துகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்