இலங்கை

நிபா வைரஸ் தொற்று பரவல் – உன்னிப்பாக அவதானித்து வரும் இலங்கை!

  • January 27, 2026
  • 0 Comments

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் உன்னிப்பாக கண்காணித்து வருவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையின் மூத்த சுகாதார அமைச்சக வட்டாரம் ஒன்று, இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.  இதன்படி தேவையான முன்னெச்சரிக்கைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. “இலங்கை விழிப்புடன் உள்ளது மற்றும் பிராந்திய நிலைமையை மிகவும் கவனமாகக் கண்காணித்து வருகிறது. தற்போது உடனடி அச்சுறுத்தல் இல்லை. ஆனால் சர்வதேச சுகாதார அதிகாரிகளின் […]

விளையாட்டு

ஆட மறுக்கும் பாகிஸ்தான்: அடங்க மறுக்கும் ICC!

  • January 27, 2026
  • 0 Comments

ICC T-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின்போது இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ICC T-20 உலகக்கிண்ண தொடர் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 55 ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் தங்கள் […]

உலகம் செய்தி

யூத சமூக பிரபலத்தின விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலியா!

  • January 27, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் உரையாற்றிருந்த யூத சமூக ஊடக பிரபலமான சமி யாஹூத்தின் Sammy Yahood விசா இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது. விமானப் பயணம் தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்னரே இவ்வாறு விசா இரத்து செய்யப்பட்டதாக வலதுசாரி நிலைப்பாட்டைக் கொண்ட ஆஸ்திரேலிய யூத சங்கம் Australian Jewish Association (AJA தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி பெர்க் Tony Burke இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். வெறுப்புணர்வை பரப்புவதற்கு ஆஸ்திரேலியா களம் அல்ல […]

இலங்கை செய்தி

கால அவகாரம் கோரினார் ஷிராந்தி!

  • January 27, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச Shiranthi Rajapaksa , பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் FCID முன்னிலையாவதற்கு கால அவகாசம் கோரியுள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் “சிரிலிய” Siriliya எனும் பெயரில் நடத்திசெல்லப்பட்ட வங்கி கணக்கில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே ஷிராந்தி ராஜபக்ச இன்று FCID க்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் இன்று முன்னிலையாக முடியாது என […]

விளையாட்டு

இறுதி ஆட்டம் இன்று! வெற்றி நடை போடுமா இலங்கை?

  • January 27, 2026
  • 0 Comments

இலங்கை SL மற்றும் இங்கிலாந்து ENG அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் – இறுதியுமான ODI ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில், இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால், தொடர் 1–1 என்ற சமநிலையில் உள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]

இலங்கை செய்தி

ஷிராந்தி ராஜபக்சவுக்கு FCID அழைப்பு!

  • January 27, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச, Shiranthi Rajapaksa பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு FCID இன்று (27) அழைக்கப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் “சிரிலிய” எனும் பெயரில் நடத்திசெல்லப்பட்ட வங்கி கணக்கில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே ஷிராந்தி ராஜபக்ச அழைக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 9 மணியளவில் அவர் FCID  இல் முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் இலங்கை செய்தி

புதிய கணக்காய்வாளர் நாயகம்: மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

  • January 27, 2026
  • 0 Comments

புதிய கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்து, கூட்டாக கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். இதற்கமைய மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை அப்பதவிக்கு நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்காமல் நீண்டகாலமாக இப்பணியிடம் வெற்றிடமாக இருப்பது பொது நிதி நிர்வாகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வெளியிலிருந்து ஒருவரை நியமிப்பதற்குப் பதிலாக, உள் கட்டமைப்புக்குள் இருந்தே ஒருவரைத் தெரிவு செய்வது நிறுவனத்தின் ஸ்திரத்தன்மைக்கு உகந்தது […]

அரசியல் இலங்கை செய்தி

இனவாத அரசியல் குறித்து பொன்சேகா எச்சரிக்கை!

  • January 27, 2026
  • 0 Comments

நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்.இது தொடர்பில் மகா சங்கத்தினர் விழிப்பாக இருக்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். “ பௌத்த மதமே இந்நாட்டில் பிரதான மதம் என்ற கருத்தில் மாற்று கருத்து கிடையாது. நானும் சிங்கள பௌத்தன்தான்.பௌத்த மதத்தை பாதுகாத்து வந்துள்ளோம். எனினும், சில அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டுகின்றனர். தமது நலனுக்காகவே அவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர். இது தொடர்பில் மக்கள், மகா சங்கத்தினர் விழிப்பாக இருக்க […]

உலகம்

தென்கொரியா மீதான வரி விதிப்பை 25% அதிகரிக்கும் ட்ரம்ப் : பங்குச் சந்தை சரிவு!

  • January 27, 2026
  • 0 Comments

கடந்த ஆண்டு எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்திற்கு சியோல் “இணங்கவில்லை” என்று குற்றம் சாட்டிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தென் கொரிய இறக்குமதிகள் மீதான வரிகளை 25% ஆக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் சமூக ஊடகம் ஒன்றில்  வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆட்டோமொபைல்கள், மரம், மருந்துகள் மற்றும் “மற்ற அனைத்து பரஸ்பர வரிகள்” உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளில் தென் கொரியா மீதான வரிகளை 15% இலிருந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இதேவேளை   வரிகளை உயர்த்தும் முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு […]

கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களைப் பதிவு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கை முடிக்க கூகுள் $68 மில்லியன் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது. முழு விவரம் இங்கே. அறிவியல் & தொழில்நுட்பம்

பயனர்களின் தனிப்பட்ட பேச்சை ஒட்டுக்கேட்ட கூகுள்? – சிக்கிய வழக்கை முடிக்க $68 மில்லியன் இழப்பீடு.

  • January 26, 2026
  • 0 Comments

கூகுள் நிறுவனம் தனது பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களை ரகசியமாகக் கேட்டதாகத் தொடரப்பட்ட வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, 68 மில்லியன் டாலர் (சுமார் ₹570 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு (Android) மொபைல்களில் இருக்கும் ‘கூகுள் அசிஸ்டெண்ட்’ (Google Assistant), பயனர்கள் அழைக்காத போதும் தானாகவே செயல்படத் தொடங்கி, அவர்களின் ரகசிய உரையாடல்களைப் பதிவு செய்ததாகப் பயனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். “ஹே கூகுள்” (Hey Google) என்று சொல்லாமலேயே, தவறான தூண்டுதலால் (Inadvertent trigger) இந்த மென்பொருள் […]