இலங்கை செய்தி

டிட்வா பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளது – ஆளுநர் வேதநாயகன்

  • January 27, 2026
  • 0 Comments

டிட்வா புயல் இடர் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டு, பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். அந்த பணிகளை மிகச் சிறப்பாகக் கையாண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று செவ்வாய்க்கிழமை (27.01.2026) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இணைத்தலைவராக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு […]

இலங்கை செய்தி

பேரிடரால் சேதமடைந்த மதத் தலங்களை மீள கட்யெழுப்பும் திட்டம் ஆரம்பம்!

  • January 27, 2026
  • 0 Comments

டித்வா சூறாவளியால் சேதமடைந்த அனைத்து மதத் தலங்களையும் அவற்றின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். டித்வா சூறாவளியால் சேதமடைந்த மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (27) ஆரம்பமானது. கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு, […]

உலகம்

ஈரான் அரச எதிர்ப்பு போராட்டம் – 6000இற்கும் மேற்பட்டோர் மரணம்!

  • January 27, 2026
  • 0 Comments

ஈரானில் நடந்து வரும் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,000ஐ தாண்டியுள்ளது. அமெரிக்காவை மையமாகக் கொண்ட மனித உரிமை அமைப்புகளை மேற்கோள் காட்டி, வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய  போராட்டங்களில் 6,126 பேர் இறந்துள்ளதாகவும்,  11,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்கும் மேலாக நீடித்த போராட்டங்கள் தொடர்பாக ஈரானிய பாதுகாப்புப் படையினரால் 41,800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அறிவியல் & தொழில்நுட்பம்

Just Eat UK செயலியில் புதிய AI குரல் உதவியாளர் அறிமுகம்

  • January 27, 2026
  • 0 Comments

உணவு விநியோக நிறுவனமாக Just Eat வாடிக்கையாளர்களுக்கான புதிய AI குரல் உதவியாளரை UK செயலியில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய AI குரல் உதவியாளர், வாடிக்கையாளர்கள் எந்த உணவை உண்பது என்று முடிவெடுக்க உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் குரல் மூலம் ஆர்டரைப் பற்றி உரையாடி, தனிப்பட்ட பரிந்துரைகளை பெறலாம். குறித்த AI குரல் உதவியாளர், முன் ஆர்டர்கள் மற்றும் உணவு விருப்பங்களை பயன்படுத்தி சரியான பரிந்துரைகளை வழங்குகிறது. இது பல மொழிகளில் பேசக்கூடியது என்பதுடன் பார்வைக் குறைபாடுகள் உள்ள […]

ஐரோப்பா

நேட்டோவை தாக்கும் ரஷ்யா – ஜெர்மனி எச்சரிக்கை!

  • January 27, 2026
  • 0 Comments

போர் சூழ்நிலைக்கு ஜேர்மன் துருப்புக்கள் தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜெர்மன் ஆயுதப்படை ஆதரவு கட்டளைத் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஜெரால்ட் ஃபங்கே (Lieutenant General Gerald Funke) அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் நேட்டோமீது  ரஷ்யா பாரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஜெர்மனியின் ஆயிரக்கணக்கான துருப்புக்கள் முழு அளவிலான போர் சூழலுக்கு தயாராகி வருவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார். நாசவேலை மற்றும் ஸ்லீப்பர் செல்கள் உள்ளிட்ட கலப்பின அச்சுறுத்தல்கள் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம் – போராட்டக்காரர்கள், பொலிஸார் இடையே தர்க்கம்

  • January 27, 2026
  • 0 Comments

சேவை நிரந்தரம் கோரி ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று முன்னெடுத்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தர்க்க நிலை ஏற்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தின் போது இன்று (27) அவர்கள் நீதியின் மரணம் எனக் குறிப்பிட்டு சவப்பெட்டியொன்றை எரித்தனர். இந்நிலையில் அதனை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் அறிவித்தனர். அத்துடன், இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினால் நடைபாதை தடைப்படுவதாக பொலிஸார் தெரிவித்ததையடுத்து, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது. […]

இலங்கை செய்தி

40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி மீண்டும் திறப்பு – விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி

  • January 27, 2026
  • 0 Comments

40 வருடங்களாக காடாக இருந்த மாங்காடு விதானையார் வீதி, தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் நேரடித்தலையீட்டில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மாங்காடு விதானையார் வீதி கடந்த 40 வருடங்களாக கவனிப்பார் அற்ற நிலையில் பற்றைக்காடாக காணப்பட்டது. இதனால் இந்த பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் பல சவால்களை எதிர்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜிடம் […]

இலங்கை செய்தி

கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

  • January 27, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டார். கடந்த இரு நாட்களாக வடக்குக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பதிவாளர், நிதியாளர், நூலகர் மற்றும் அரசறிவியல், பொருளியல் மற்றும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறைகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்புகளின் போது, அரசியல் பொருளாதார நிலைமைகள் […]

இலங்கை செய்தி

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு

  • January 27, 2026
  • 0 Comments

கடந்த வருடம் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ​​2026 ஆம் ஆண்டு ஜனவரியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 2025 ஜனவரி மாதத்தில் மொத்தம் 4,970 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்தார். இருப்பினும், இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6,521 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் அவர் கூறினார். கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் […]

ஐரோப்பா செய்தி

நில வாடகைக்கு முற்றுப்புள்ளி” ; இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆண்டுக்கு 250 பவுண்டுகள் உச்சவரம்பு அமல்

  • January 27, 2026
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குத்தகை வீடுகளுக்காக செலுத்தப்படும் நில வாடகைக்கு உச்சவரம்பு ஒன்றை அரசாங்கம் அறிவிக்கவுள்ளது. தொழிற்கட்சியின் 2024 தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில், கட்டுப்பாடற்ற நில வாடகை வசூல்களை ஒழுங்குபடுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. உச்சவரம்பு எவ்வளவு என இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அது ஆண்டுக்கு சுமார் 250 பவுண்டுகளாக இருக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த முடிவு ஓய்வூதிய நிதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகளும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசு தனது […]