இலங்கை செய்தி

சிங்கள பிரதேசங்களுக்கு நீரைக் கொடுப்பதற்கே கிவுல் ஓயா திட்டம் – போராட்ட களத்தில் சுமந்திரன் ஆதங்கம்

  • February 2, 2026
  • 0 Comments

தமிழ் பிரதேசம் முழுவதையும் நீருக்குள் அமிழ்த்தி அதிலிருந்து வருகின்ற நீர்ப்பாசனத்தின் மூலமாக ஏற்கனவே குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள பிரதேசங்களுக்கு நீரைக் கொடுப்பதற்காகவே கிவுல் ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வுவுனியா , நெடுங்கேணியில் கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக இன்று (02) முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “பல தசாப்தங்களுக்கு முன்னராகவே […]

இலங்கை செய்தி

கிவுல் ஓயா திட்டத்திற்கான எதிர்ப்பு போராட்டம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு

  • February 2, 2026
  • 0 Comments

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (02) நெடுங்கேணியில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு போராட்டம் காலை 10.30 க்கு நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகியது. திட்டத்திற்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி நெடுங்கேணி பிரதேச செயலாளரை […]

இலங்கை செய்தி

அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்குவோருக்கான மகிழ்ச்சி செய்தி

  • February 2, 2026
  • 0 Comments

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை 12,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றைய நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின்விலை 368,000 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 338,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தின் […]

அரசியல் இலங்கை செய்தி

ரணில், நாமல் சங்கமம்? மொட்டு கட்சி மறுப்பு!

  • February 2, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் UNP ஒன்றிணையவுள்ளன என வெளியாகும் தகவலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP நிராகரித்துள்ளது. கொழும்பில் இன்று (02) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இரு தரப்பு இணைவு தொடர்பில் மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்திடம் Sagara Kariyawasam கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பவற்றுக்கிடையில் கொள்கை வேறுபாடுகள் உள்ளன. […]

உலகம்

அமெரிக்காவில் 1 இலட்சத்து 78 ஆயிரம் கட்டிடங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு!

  • February 2, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 1200 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாகவும் ப்ளூம்பெர்க் (Bloomberg) செய்தி வெளியிட்டுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் வானிலை அமைப்பு வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மிகக் கடுமையான தாக்கங்கள் கடலோரப் பகுதிகளில் உணரப்படும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்திய குளிர்கால வானிலை அமெரிக்க மின் கட்டமைப்புகளில், குறிப்பாக கரோலினாஸில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தெற்கின் சில பகுதிகளில் மின் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீ – போராடும் தீயணைப்பு வீரர்கள்!

  • February 2, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் (Adelaide) காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. அதனை அணைக்க சுமார் 250 தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும், 20 க்கும் மேற்பட்ட சொத்துக்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதுவரை சுமார் 960 ஹெக்டேயர்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை உச்சம் தொட்டுள்ளது. சுமார் 50 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ஐரோப்பா

விசாரணைக்கு வரும் நோர்வே இளவரசர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்!

  • February 2, 2026
  • 0 Comments

நோர்வேயின் பட்டத்து இளவரசரான மரியஸ் போர்க் ஹோய்பி (Marius Borg Høiby) பாலியல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவருடைய வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒஸ்லோ (Oslo) மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக 38 குற்றச்சாட்டுகளுக்கான குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் கற்பழிப்பு, ஒரு முன்னாள் துணைக்கு எதிரான நெருங்கிய உறவில் துஷ்பிரயோகம், மற்றொருவருக்கு எதிரான வன்முறைச் செயல்கள் மற்றும் 3.5 கிலோ (7.7 பவுண்டுகள்) கஞ்சாவை வைத்திருந்தமை ஆகியவை முக்கிய குற்றச்சாட்டுகளாகும். அத்துடன் […]

விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு ICC எச்சரிக்கை!

  • February 2, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் அணி கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சர்வதேச கிரிக்கெட் சபை ICC எச்சரிக்கை விடுத்துள்ளது. 2026 T20 உலகக்கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகள் புறக்கணிக்கப்படலாம் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆட்டமானது அதிக வர்த்தக மதிப்பு கொண்ட போட்டி என்பதால், அதனை தவிர்ப்பது பாதிப்பாக அமையுமென ஐ.சி.சி. ICC கருதுகின்றது. மேலும், இது நியாயமான போட்டி, விளையாட்டு ஒழுக்கம் மற்றும் சமத்துவம் என்ற […]

இந்தியா

இந்திய பாதீட்டில் இலங்கைக்கான ஒதுக்கீடு அதிகரிப்பு!

  • February 2, 2026
  • 0 Comments

இந்தியாவின் 2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வரவு- செலவுத் திட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. பாதீட்டு தரவுகளின் அடிப்படையில் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான வெளிநாடுகளுக்கான மொத்த இந்திய உதவி 56.86 பில்லியன் (இந்திய ரூபா) முன்மொழியப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கைக்கான உதவியை இந்தியா 4 பில்லியன் இந்திய ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டுக்கான பாதீட்டில் இலங்கைக்காக 3 பில்லியன் […]

அரசியல் இலங்கை செய்தி

“வடக்கிலிருந்து படைகளை முற்றாக அகற்ற தமிழ் மக்கள் எதிர்ப்பு”

  • February 2, 2026
  • 0 Comments

” வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை முழுமையாக அகற்றுவதற்கு தமிழ் மக்கள் விரும்பவில்லை. அவை இருப்பதால்தான் தமக்கு பாதுகாப்பு என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச Wijeyadasa Rajapaksa தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். “ தைப்பொங்கல் விழாவுக்காகவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றார். தமிழ் மக்களின் மனங்களில் “வைரஸை” விதைத்தார். சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை காட்ட முனைந்தார். ஏனைய ஜனாதிபதிகளைவிட அநுரவுக்கு வடக்கு, […]