14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறை
கல்முனையில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை குறித்த சிறுமி 3 தடவைகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதால் சிறுமி கர்ப்பமடைந்து ஆண் குழந்தையொன்றையும் பிரசவித்துள்ளார். குற்றவாளி பாதிக்கப்பட்ட சிறுமியின், சகோதரியின் 27 வயதுடைய கணவர் […]













