கனடாவை அச்சுறுத்தும் வெள்ளம் – 2 சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் மரணம்
கனடாவின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து மரண எண்ணிக்கை 3ஆக அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சனிக்கிழமை நோவா ஸ்கோஷியாவில் (Nova Scotia) உள்ள தங்களது வீட்டை விட்டு வெளியேறச் சிறுவர்கள் முயன்றபோது அவர்களை ஏற்றியிருந்த வாகனம் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டது. காரில் இருந்த மேலும் 3 பேர் உயிர்தப்பினர். அதே போன்ற சூழ்நிலையில் காணாமல் போன 52 வயது […]













