பொழுதுபோக்கு

மலையக மக்களின் 200வது ஆண்டு நினைவாக தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடைபயணம்

  • July 28, 2023
  • 0 Comments

தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடைபயணமாக சென்று மலையக மக்கள் குடியேறிய 200 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பமாகவுள்ள நடைபயணத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (28) மாலை 5 மணியளவில் தலைமன்னாரில் ஆரம்பமானது. மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் ஆகின்றது. அவர்கள் தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடை பயணமாகவே வந்து இந்த மலையகப் பகுதியில் குடியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதை அடிப்படையாக வைத்து நாளை சனிக்கிழமை 29ம் திகதியிலிருந்து (29.07.2023) ஆகஸ்ட் மாதம் 12ந் திகதி […]

உலகம்

நைஜர் நாட்டில் தொடரும் பதற்றம்! ஆளுங்கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்த கும்பல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் இராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு அதிபர் முகமது பாசும் தலைமையிலான அரசை கவிழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்களை துப்பாக்கி சூடு நடத்தி இராணுவம் விரட்டியடித்தது. நைஜரில் அதிபர் முஹமத் பாஸுமை அதிகாரத்தில் இருந்து அகற்றி ஆட்சியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதால் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. நைஜீரியாவில் பாதுகாப்பின்மை மற்றும் பொருளாதார சரிவு காரணமாக அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாத நிலை கடந்த சில ஆண்டுகளாக நீடித்து […]

இலங்கை

யாழ். இந்து கல்லூரியில் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம்

  • July 28, 2023
  • 0 Comments

பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.   இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் உயரதிகாரிகள் பாடசாலை மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து ஓவியம் வரைவது தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிப் […]

இலங்கை

சீனாவின் அடுத்த இராணுவதளம் இலங்கையில்! வெளியான சர்வதேச அறிக்கை

சீனாவின் இராணுவம் இலங்கையில் தனது இரண்டாவது வெளிநாட்டு கடற்படைத் தளத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளது. என சர்வதேச அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வேர்ஜீனியாவின் வில்லியம் மேரி கல்லூரியின் எய்ட்டேட்டா ஆய்வகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி போன்றவற்றில் சர்வதேச வர்த்தகத்தை பாதுகாக்க துறைமுகம் மற்றும் துறைமுக உள்கட்டமைப்பை நிறுவுவதில் சீன வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளதாக ஆய்வு செய்த புதிய அறிக்கையின்படி சீனாவின் அடுத்த வெளிநாட்டு துறைமுகம் இலங்கையில் […]

ஐரோப்பா

விபத்தில் பலியான 7 வயது சிறுமி.. 14 வயது சிறுவனை கைது செய்த பொலிஸார்!

  • July 28, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் 7 வயது சிறுமி விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததை தொடர்ந்து 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லாண்ட் பகுதியில் உள்ள வால்சால்(Walsall) சாலையில் 14 வயது சிறுவன் ஒருவர் 7 வயது சிறுமி மீது தன்னுடைய மோட்டார் பைக்-ஆல் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார். இதில் 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு இரவு 7 மணியளவில் விரைந்து சென்ற பொலிஸார் நிலைமையை ஆராய்ந்தனர்.அத்துடன் விபத்து ஏற்படுத்திய 14 வயது […]

பொழுதுபோக்கு

தமன்னாவின் மோதிரம் இரண்டு கோடி ரூபாயா? இதோ அவரது அதிர்ச்சியான விளக்கம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் அனிருத் இசையமைத்த ‘காவாலா’ பாடலின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு தென்னிந்தியா மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா தனது வாழ்க்கையில் மற்றொரு உயரத்தை எட்டியுள்ளார். இதற்கிடையில், ஒரு பெரிய வைர மோதிரம் போன்ற தோற்றமளிக்கும் அவரது புகைப்படம் ஒன்று வைரலானதை அடுத்து அது பேசுபொருளானது. இந்த மோதிரத்தின் விலை சுமார் 2 கோடி ரூபாய் என்றும், 33 வயதான நடிகைக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் தேஜாவின் மனைவி உபாசனா […]

இலங்கை

தமிழர் பகுதியில் இராணுவ முகாம்கள் -புத்தர் கோவில்கள் அமைக்கப்படுவது மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கே! செல்வம் அடைக்கலநாதன்

மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கே அங்கங்கு புத்தர் கோவில்கள் அமைக்கப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”உண்மையிலே […]

பொழுதுபோக்கு

அதிர்ஷ்டத்தை தேடி அலையும் மனிதனின் கதை – யோகிபாபுவின் புதிய டீசர்

  • July 28, 2023
  • 0 Comments

காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் லக்கி மேன். இப்படத்தை பாலாஜி வேணுகோபால் என்பவர் இயக்கி உள்ளார். ஆர்.ஜே.வாக பணியாற்றி வந்த இவர், நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இப்படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். அதிர்ஷ்டத்தை தேடி அலையும் மனிதனின் கதையை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளனர். லக்கி மேன் படத்தை தின்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு […]

இந்தியா

திருமணத்துக்கு மறுப்பு சொன்ன மாணவிக்கு நேர்ந்த கதி!

  • July 28, 2023
  • 0 Comments

டெல்லியில் கல்லூரி மாணவி ஒருவரை இரும்புக் கம்பியால் தாக்கி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள கமலா நேரு கல்லூரி மாணவி நர்கீஸ், 26 வயதான இர்பான் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது.இவர்களது திருமணத்திற்கு மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பின்பு, நர்கீஸ் இர்பானுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனையடுத்து, நர்கீஸ் தன்னுடன் பேசுவதை நிறுத்திய பிறகு இர்பான் வருத்தமடைந்துள்ளார். இந்த ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த நர்கீஸ் மாளவியா நகரில் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வந்துள்ளார்.இந்நிலையில், […]

இலங்கை

குறை கூறும் தலைவர்கள் உள்ள வரை இலங்கையின் நீதித்துறை கேள்விக்குறியே -சி.சிறீதரன்

  • July 28, 2023
  • 0 Comments

தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் பிழை என கூறும் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை இலங்கையின் நீதித்துறை கேள்விக்குறியே என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே […]