இலங்கை

தமிழர் பகுதியில் இராணுவ முகாம்கள் -புத்தர் கோவில்கள் அமைக்கப்படுவது மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கே! செல்வம் அடைக்கலநாதன்

மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கே அங்கங்கு புத்தர் கோவில்கள் அமைக்கப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”உண்மையிலே மக்களுடைய எழுச்சி போராட்டம் வெற்றி அளிக்க வேண்டும். மக்களை படுகொலை செய்த இராணுவத்தினுடைய முகாமிற்கு அருகாமையிலே இப்போது மனித எச்சங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அது தற்போது மூடப்பட்டிருக்கிறது. இவ்வாறு தொடர்ச்சியாக அழிக்கப்பட்ட மக்களுடைய மனித எச்சங்கள் கிளம்புகின்ற போது அதனை மூடி மறைக்கின்ற செயற்பாட்டிலே இலங்கை அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.

என்னை பொறுத்த மட்டிலே இந்த இராணுவ முகாம்கள் பெருப்பிப்பதற்கான காரணம் மனித எச்சங்களை மறைப்பதற்காகவோ என்னவோ தெரியவில்லை. அதே விட புத்தர் கோவில்கள் அங்கங்கே முளைப்பதற்கான காரணம் மக்களுடைய படுகொலையை மறைப்பதற்கான செயற்பாடுகளாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகப்படுகிறோம்.

ஆகவே இந்த போராட்டம் நிச்சயமாக உலக நாடுகளை ஈர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மக்களுடைய போராட்டமும் சரி எங்களுடைய இனத்தின் நிலங்கள் அபகரிக்கின்ற விடயங்களாக இருக்கலாம், எங்களுடைய இனத்தின் பிரச்சினையாக இருக்கலாம். இந்த கட்சிகள், வெறும் வாயளவிலே, உதட்டளவிலே தங்களுடைய கருத்துக்களை சொல்லாமல், ஒரு குடையின் கீழ் அணிதிரள்கின்ற போதுதான் நாங்கள் எங்களுடைய இனத்தின் பாதுகாப்பை காப்பாற்ற முடியும்.

ஆகவே இந்த சமயத்திலே நான் அறைகூவல் விடுகிறேன். மக்களுடைய நன்மைக்காக இந்த நிலத்திற்காக, பல போராளிகள் மாண்டிருக்கிறார்கள். பல இயக்கங்கள் இதற்காக அர்ப்பணிப்பை செய்திருக்கிறார்கள்.

ஆகவே இந்த விடயத்திலே, தமிழ் கட்சிகள் அனைவரும் தேசியத்தை நேசிக்கின்ற தமிழ் கட்சிகள் அனைவரும் ஒரு குடையின் அணிதிரண்டு எங்களுடைய மக்களுடைய, பிரச்சினைகளை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை இச் சந்தர்ப்பத்திலே கேட்டு கொள்கிறேன்”என தெரிவித்துள்ளார்.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content