இலங்கை

போலி காசோலையை கொடுத்து மோசடி செய்த நபர் – கைது செய்த பொலிஸார்

  • August 8, 2023
  • 0 Comments

மோசடியான காசோலையைக் கொடுத்து வாகனமொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு தலைமறைவான சந்தேகநபரை பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர். இளவாலையைச் சேர்ந்தவரிடம் ஓராண்டுக்கு முன்னர் 62 லட்சம் ரூபாவுக்கு வாகனமொன்றை ஒருவர் வாங்கியுள்ளார். அதற்குரிய காசோலையை வழங்கியபோது, வங்கியில் பணம் இல்லாமையால் அது திரும்பியுள்ளது. வாகனத்துக்குரிய பணத்தை கேட்டபோது விரைவில் அதனைத் தருவதாக் கூறி ஏமாற்றிவிட்டு, வாகனத்துடன் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்னர் மாவிட்டபுரத்தில் மேற்படி வாகனம் மின்ஒழுக்கு காரணமாக எரிந்துள்ளது. இதனால் வாகனத்தோடு தலைமறைவானர் […]

இலங்கை

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் கோளாறு!

270 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நுரைச்சோலை நிலக்கரிமின் நிலையத்தின் ஒரு அலகு இன்று அதிகாலை பழுதடைந்துள்ளது. ஆலையில் உள்ள மூன்று மின் உற்பத்தி அலகுகளில், தற்போது ஒன்று மட்டுமே இயங்கி வருகிறது பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஜூன் மாதத்தில் மற்றுமொரு யூனிட் (270MW) நிறுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

ஐரோப்பா

இத்தாலியில் சீஸ் கட்டிகள் சரிந்து விழுந்து ஒருவர் பலி!

  • August 8, 2023
  • 0 Comments

வடக்கு இத்தாலியின் பெர்கமோ அருகே பால் தொழிற்சாலை ஒன்றின் உரிமையாளர் 25,000 சீஸ் கட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த அலமாரிகள் சரிந்து விழுந்தால் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 74 வயதான கியாகோமோ சியாப்பரினி என்ற நபரே உயிரிழந்துள்ளார். சீஸ் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 40 கிலோ எடையுள்ளவை என தெரிவிக்கப்படுகிறது. குறித்த உலோக அலமாரி எவ்வாறு சரிந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் பொருள் சோர்வு அல்லது தொழில்நுட்பக் கோளாறே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இலங்கை

நாடாளுமன்ற பெண் பணியாளர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பராமரிப்புத் துறையின் பெண் ஊழியர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த புகார்கள் குறித்து உள்ளக விசாரணை நடத்த மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இன்று பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

ஐரோப்பா

அண்டார்டிகாவில் உடையும் பனிப்பாறைகள் : கலக்கத்தில் விஞ்ஞானிகள்!

  • August 8, 2023
  • 0 Comments

அண்டார்டிகாவில் உள்ள மிகப் பெரிய பனிப்பாறைகள் உடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து ஆராய்வதற்கான வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என விஞ்ஞானிகள் குழு இன்று (08.08) எச்சரித்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகி வெள்ளம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வெல்ஸில் மிகப் பெரிய பனிப்பாறைகள் உடைந்திருப்பதாக கூறப்படுகிறது. UK வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் துருவப் பகுதிகளின் தலைவர் ஜேன் ரம்பிள் அண்டார்டிகாவில் என்ன நடக்கிறது என்பதை […]

பொழுதுபோக்கு

கமலஹாசன் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் படம் தொடர்பான புதிய அறிவிப்பு

  • August 8, 2023
  • 0 Comments

‘மாவீரன்’  படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் நடிகர் சிவகாரத்திகேயன், ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். ‘எஸ்கே 21’ என்று அழைக்கப்படும் இந்த படத்தை  கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இப்படத்தை ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் பராமரிப்பு பணியாளர்களில் உள்வாங்கப்பட்டுள்ள பெருமளவான இந்தியர்கள்!

  • August 8, 2023
  • 0 Comments

2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணியாளர்களில் பெருமளவானவர்கள் இந்தியர்கள் என ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இடம்பெயர்வு ஆய்வகம் இந்த அறிக்கையை வெளியிட்டது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில், திறமையான வேலை விசாக்களுக்காக நிதியுதவி பெற்ற பெரும்பாலான பராமரிப்புப் பணியாளர்கள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் குடியேற்ற அமைப்பு 2022-2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து முன்னோடியில்லாத எண்ணிக்கையிலான தொழிலாளர்களை சுகாதார மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு […]

ஐரோப்பா

மிதக்கும் சிறை – மறுப்பவர்களுக்கு பிரிட்டன் அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

  • August 8, 2023
  • 0 Comments

புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதால் ஆகும் செலவைக் குறைப்பதற்காக, அவர்களை மிதவைப்படகுகளில் தங்கவைக்கும் திட்டத்தில் முதல் படி எடுத்துவைத்துவிட்டது பிரித்தானிய அரசு. Barge எனப்படும் இந்த மிதவைப்படகுகள்தான் இனி புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்குமிடமாக ஆக்கப்பட உள்ளன. பல்வேறு தரப்பிலிருந்தும் இந்த மிதவைப்படகுத் திட்டத்துக்கு எதிர்ப்பு வந்தும், Bibby Stockholm என்ற பெயர் கொண்ட மிதவைப்படகில் 15 புகலிடக்கோரிக்கையாளர்கள் ஏற்றப்பட்டாயிற்று. அந்த மிதவைப்படகு 222 பேர் மட்டுமே தங்கும் வசதிகொண்டது என்றும், அதில் மிக அதிக எண்ணிக்கையிலானவர்கள் தங்கவைக்கப்பட இருப்பதாகவும், அத்துடன், […]

ஐரோப்பா

ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுப்பிடிப்பு!

  • August 8, 2023
  • 0 Comments

ஜேர்மனியின் Dusseldorf நகரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டொன்று இனங்காணப்பட்டுள்ளது. நகரத்தின் மிருக காட்சிசாலைக்கு அருகில் குறித்த வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக குறித்த பகுதியில் இருந்து சுமார் 13000 மக்களை வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன் குண்டு இனங்காணப்பட்ட 500 மீற்றர் சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியூடான போக்குவரத்தும் தற்காலிக்கமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை கடந்த […]

இலங்கை

OMP விசாரணை என்ற போர்வையில் அலைய விட்டு வெடிக்கை பார்க்கின்றது – மனுவல் உதயச்சந்திரா

  • August 8, 2023
  • 0 Comments

மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) தொடர்ந்தும் அவர்களின் உறவுகளை அழைத்து அலைய விட்டு வேடிக்கை பார்ப்பதாகவும் குறித்த நடவடிக்கையினை வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார். மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (8) காலை 10 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் […]