இந்தியா

இந்தியாவிற்கு விஜயம் செய்யும் ஜோ பைடன்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இந்தியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் நாளை டெல்லிக்கு வருகை தரவுள்ளார். இந்தியாவில் முதன் முறையாக ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இது தவிர சிறப்பு அழைப்பாளர்களாக வங்கதேசம், […]

இந்தியா

சீமான் மீது பிரபல நடிகை கொடுத்த புகார் : கீழ்பாக்கம் மருத்துவமனையில் பரிசோதனை!

  • September 7, 2023
  • 0 Comments

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலியல் முறைப்பாடு அளித்துள்ளார்.  இது குறித்து மகளிர் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பில் விஜயலெட்சுமி அளித்துள்ள பேட்டியில்,  7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக பொலிஸ் விசாரணையிலும் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன் திருவள்ளுர் நீதிமன்றத்திலும் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் சீமானுக்கு எதிரான முறைப்பாடு […]

ஐரோப்பா

குற்றவாளியை பிரித்தானியாவுக்கு நாடுகடத்த மறுப்பு தெரிவித்துள்ள ஜேர்மனி…

  • September 7, 2023
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட ஒருவரை பிரித்தானியாவுக்கு நாடுகடத்த ஜேர்மனி மறுத்துவிட்டது. பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த அல்பேனியா நாட்டவர் ஒருவர் மீது, சுமார் 5 கிலோ கொக்கைன் கடத்தியது மற்றும் சுமார் 330,000 பவுண்டுகள் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது காதலி மோசமாக நோய்வாய்ப்பட்டதால் அவர் ஜேர்மனிக்குச் சென்றுவிட்டார். தற்போது அவரை பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பும்படி பிரித்தானிய அதிகாரிகள் கோரியுள்ளார்கள்.ஆனால், அவரை பிரித்தானியாவுக்கு நாடுகடத்த ஜேர்மனி மறுத்துவிட்டது. […]

இலங்கை

தடுப்பூசி விஷமானதில் நான்கு மாத குழந்தை உயிரிழப்பு!

  • September 7, 2023
  • 0 Comments

வெலிகம – நலவன பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், 4 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்குழந்தைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி விஷமானமையே இறப்புக்கான காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த தடுப்பூசியானது கடந்த 2 ஆம் திகதி இக் குழந்தைக்கு  வெலிபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, குழந்தைக்கு ஏற்பட்ட கடும் குளிர் காரணமாக 05ம் திகதி இமதுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிலமை […]

இலங்கை

முல்லைத்தீவில் கைக்குண்டு வெடித்தத்தில் இருவர் படுகாயம்!

முல்லைத்தீவு – மாங்குளம் – நீதிபுரம் பகுதியில் கைக்குண்டு ஒன்று வெடித்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 7 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியா

ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்துள்ள புகைப்படம்!

  • September 7, 2023
  • 0 Comments

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் கடந்த 02 ஆம் திகதி அனுப்பப்பட்ட ‘ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ரொக்கெட்டில் இருந்து ‘ஆதித்யா எல்1’ விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்று புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  விண்கலத்தின் சுற்றுவட்டபாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தில் […]

பொழுதுபோக்கு

மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  • September 7, 2023
  • 0 Comments

நடிகை மீனாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மீனா. தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிப்பது மிஸ் ஆகி இருந்தாலும், ஷாஜகான் படத்தில் விஜய்யுடன் ‘சரக்கு வச்சிருக்கேன்’ என்கிற பாடலுக்கு அசத்தலான ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார். மீனா 30 வயதை கடந்த பின்னர், சினிமா வாய்ப்புகள் குறைய துவங்கியது. எனவே… […]

இலங்கை

பயாகல பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகள் வைத்தியசாலையில்!

  • September 7, 2023
  • 0 Comments

பயாகல  பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவத்துள்ளன. உணவு விஷமானமை காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சுகவீனமடைந்தவர்களில், இலஞ்ச ஒழிப்பு பிரிவின் இரண்டு அதிகாரிகள், பெண்கள் உள்பட  பல பொலிஸ் அதிகாரிகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

பாதுகாப்பு செயலாளரினால் வெளியிடப்பட்ட இரண்டு புதிய இலக்கிய புத்தகங்கள் மற்றும் பாடல்!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) எழுதிய இரண்டு புதிய இலக்கியப் படைப்புகள் மற்றும் ஒரு பாடல் நேற்று (செப். 06) கொழும்பில் நடைபெற்ற விழாவின் போது வெளியிடப்பட்டது. கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜெனரல் குணரத்னவினால் எழுதப்பட்ட இரண்டு புதிய இலக்கியப் படைப்புகள் “தரகே அகமனய” (Tharage Agamanaya) மற்றும் “காதோல் அத்து” (Kadol Aththu) (மொழிபெயர்ப்பு) […]

இலங்கை

மொரந்துடுவ பிரதேசத்தில் பெண்களிடம் அத்துமீறிய போலி பொலிஸ்

  • September 7, 2023
  • 0 Comments

வலான ஊழல் தடுப்பு பிரிவை சேர்ந்தவர் என போலி அடையாள அட்டையை காட்டி பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவர் மொரந்துடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்தோடு பெண்களிடம் தங்க நகைகள் மற்றும் பணத்தையும் சந்தேகநபர் கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் குருநாகல் வீரம்புகெதர பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் முன்னாள் இராணுவ சிப்பாய் எனவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.ஹங்வெல்ல, தெடிகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் […]