ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களால் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • September 30, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் மக்கள்தொகை ஒரு வருடத்தில் 5% அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தொற்றுநோயைத் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்கள் மீண்டும் சிங்கப்பூர வர ஆரம்பித்துள்ள நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5.6 மில்லியனாக இருந்த சிங்கப்பூரின் மக்கள்தொகை இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி 5.9 மில்லியனாக அதிகரித்துள்ளது. அவர்களில் 61% பேர் சிங்கப்பூரர்கள் என்றும் 9% பேர் நிரந்தரக் வாசிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 30% பேர் வெளிநாட்டு ஊழியர்கள் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் நாடு கடத்தப்படும் அகதிகள் – அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டால் வெளியேற்றம்

  • September 30, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அகதிகளுடைய எண்ணிக்கையானது கூடுதலாக அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் ஜெர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளின் தொகையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணத்தனால் எதிர் கட்சியானது ஆளும் கூட்டு கட்சிக்கு தனது அழுத்தத்தை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியின் அதிபர் ஓலா ஸ்கொல்ஸ் அவர்கள் இந்த விடயத்தில் கடும் அதிருப்தியான கருத்தை வெளியிட்டுள்ளார். அதாவது பல எதிர்கட்சிகள் ஜெர்மனியில் அகதி அந்தஸ்து கொடுக்கின்ற அடிப்படை சட்டம் 16 ஐ முற்றாக அகற்ற வேண்டும் என்ற வேண்டுதலை […]

ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

  • September 30, 2023
  • 0 Comments

பிரான்ஸில் குழந்தை பிறப்பு வீதம் மிக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இரண்டாம் உலகப்போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் மொத்தமாக 726,000 குழந்தைகள் பிரான்சில் பிறந்துள்ளன. இந்த எண்ணிக்கை சென்ற 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.2 சதவீதம் குறைவாகும். அதேவேளை, 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவாகும். அதுவே, 1971 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.8 சதவீதம் வீழ்ச்சியாகும். வருடம் ஒன்றில் 726,000 குழந்தைகள் பிறப்பது […]

இலங்கை

நான் நலம் – உடல்நிலை குறித்து மஹிந்த விளக்கம்

  • September 30, 2023
  • 0 Comments

தான் சிறந்த உடல்நிலையுடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்வியொன்றிற்கு பதிலளித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நான் நல்ல உடல்நிலையுடன் உள்ளேன் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம். உங்களால் நான் நோய்வாய்ப்பட்டுள்ளேனா அல்லது நல்லநிலையில் உள்ளேனா என்பதை பார்க்க முடியும் சமூக ஊடகங்களில் வெளியாகும் விடயங்களிற்கு முக்கியத்துவம் அளிக்ககூடாது. தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவராக இருக்கவிரும்பவில்லை. இளையவர் ஒருவருக்கு அந்த பொறுப்பை வழங்கவேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியா செய்தி

சீரற்ற காலநிலை காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

  • September 29, 2023
  • 0 Comments

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவா, கோவை, அபுதாபி, புனே, ராஞ்சி, ஐதராபாத், கொல்கத்தா உள்பட 10 விமனங்கள் பலத்த மழை பெய்தால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. வானிலை சீரானதும் பறந்த கொண்டிருந்த ஒன்றின் பின் ஒன்றாக தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் சென்னையில் இருந்து […]

செய்தி மத்திய கிழக்கு

பல்வேறு சட்ட மீறல்கள்; இரண்டு நாட்களில் 36 வாகனங்களை துபாய் பொலிசார் பறிமுதல்

  • September 29, 2023
  • 0 Comments

பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட 36 வாகனங்களை துபாய் காவல்துறை போக்குவரத்து ரோந்துப் பிரிவு பறிமுதல் செய்தது. இரண்டு நாட்களில் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், ஒருவரின் உயிருக்கோ மற்றவர்களின் உயிருக்கோ ஆபத்தை ஏற்படுத்துதல், வாகனத்தின் இயந்திரம் அல்லது தோற்றத்தை மாற்றுதல், குடியிருப்பாளர்களுக்கு இடையூறு விளைவித்தல், தெளிவற்ற நம்பர் பிளேட்களை பொருத்துதல் மற்றும் பொதுச் சாலைகளில் குப்பைகளை வீசுதல் ஆகியவை கண்டறியப்பட்ட மீறல்களாகும். 2023 ஆம் ஆண்டின் உத்தரவின்படி, இதுபோன்ற சட்ட மீறல்களை காவல்துறை […]

உலகம் செய்தி

40 நாய்கள் பாலியல் பலாத்காரம்; சிக்கிய பிரபலம்

  • September 29, 2023
  • 0 Comments

நாய்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை ஆடம் பிரிட்டன் அமெரிக்காவை சேர்ந்தவர். பிரபல சேனல்களின் தயாரிப்புகளில் விலங்கியல் நிபுணராக பணியாற்றியுள்ளார். வடக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக கல்விப் பணியிலும் ஈடுபட்டுள்ளார். முதலைகளைக் கையாள்வதில் வல்லமை பெற்றதால் ‘முதலை மனிதன்’ என்றும் அழைக்கப்படுகிறார். இந்நிலையில் அவர் விலங்குகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். குறிப்பாக நாய்களை சித்ரவதை செய்து வீடியோ எடுத்துள்ளார். அவர் மீது சந்தேகம் […]

ஐரோப்பா செய்தி

முன்னாள் வாக்னர் தளபதி ஆண்ட்ரி ட்ரோஷேவை சந்தித்த புடின்

  • September 29, 2023
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், வாக்னர் கூலிப்படையின் மிக மூத்த முன்னாள் தளபதிகளில் ஒருவரைச் சந்தித்தார், அவர் இப்போது பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றுகிறார் என்று கிரெம்ளின் கூறுகிறது. Andrei Troshev ஆகஸ்ட் மாதம் விமான விபத்தில் கொல்லப்பட்ட மறைந்த வாக்னர் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினின் முன்னாள் உதவியாளர் ஆவார். உக்ரைனில் உள்ள தன்னார்வ போர் பிரிவுகளை மேற்பார்வையிடுமாறு திரு ட்ரோஷேவை ஜனாதிபதி புடின் கேட்டுக் கொண்டார் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. திரு Troshev உரையாற்றிய ஜனாதிபதி, உக்ரைனைக் […]

ஆரோக்கியம் செய்தி

தாமதமாக தூங்குபவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்

  • September 29, 2023
  • 0 Comments

இரவில் தாமதமாக தூங்குவதும், காலையில் தாமதமாக எழுவதும் சர்க்கரை நோயின் அபாயத்தை 19 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ப்ரிங்ஹாம் மற்றும் மகளிர் மருத்துவமனை இந்த ஆய்வை நடத்தியது. அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின் இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையின்படி, சரியான தூக்க பழக்கம் இல்லாதவர்களுக்கு மற்றவர்களை விட நீரிழிவு மற்றும் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 2009-2017 க்கு இடையில் 63676 செவிலியர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் […]

இலங்கை செய்தி

கொழும்பு புறநகரில் திருடனின் செயலால் பறிபோன உயிர்

  • September 29, 2023
  • 0 Comments

கையடக்கத் தொலைபேசியைத் திருடிய இரு திருடர்களை துரத்திச் சென்ற கொத்தனார் ஒருவரை திருடன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக மவுன்ட் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொனராகலை நமுனுகுல பிரதேசத்தில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.எம்.தனுஷ்க ருவன் குமார என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். பொருபன பரக்கும் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் வாடி ஒன்றில் நேற்று (28) கொத்தனார்கள் இருவர் உறங்கிக் கொண்டிருந்த போது இந்த திருட்டுச் சம்பம் பதிவாகியுள்ளது. கொத்தனார்கள் இருவரும் சுமார் 100 […]