ஜெனீவாவில் மீண்டும் சந்திக்கும் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள்!
அமெரிக்காவுடனான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையில் நல்ல பலன் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார். தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக ஈரான் சார்பான தூதுக்குழு இன்று ஜெனீவாவிற்கு புறப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் நாளைய தினம் ஜெனீவாவில் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) […]













