உலகம் செய்தி

“மக்களைவிட பயங்கரவாதக் குழுக்களே ஈரான் அரசுக்கு முக்கியம்”

  • March 30, 2026
  • 0 Comments

ஈரான் அரசு தனது நாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்துவிட்டு, பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்க்கோ ரூபியோ Marco Rubio விமர்சித்துள்ளார். ஈரான் தமது பொருளாதாரம் மற்றும் நீர் மேலாண்மையில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற அமைப்புகளுக்காக தனது செல்வத்தைச் செலவிடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சரியான நேரத்தில் தகுந்த தூதரக முயற்சிகளை மேற்கொண்டிருந்தால், தற்போது நடைபெற்று வரும் இராணுவத் தாக்குதல்களைத் தவிர்த்திருக்கலாம் எனவும் Marco Rubio […]

உலகம் செய்தி

ஈரான்மீதான தடையை நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

  • March 30, 2026
  • 0 Comments

ஈரானில் இடம்பெறுவதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை 2027 ஏப்ரல் 13 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையின் கீழ் 262 தனிநபர்கள் மற்றும் 53 அமைப்புகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.தனிநபர்களுக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. அடக்குமுறைக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் தொலைத்தொடர்பு கண்காணிப்பு சாதனங்களை ஈரானுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய நாடுகள் தற்போது அனுமதிப்பதில்லை. ஐரோப்பிய நிறுவனங்கள் அல்லது குடிமக்கள் இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு நிதி உதவி வழங்கவும் […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை -3,500 வீரர்கள் ஈரான் முன் நிலைநிறுத்தம்

  • March 30, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா தனது இராணுவ இருப்பை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடற்படை மற்றும் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விசேட படை வீரர்கள் அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படைகள், ஈரான் தொடர்பான நிலைமையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு பல்வேறு இராணுவ தேர்வுகளை வழங்கும் நோக்கில் அனுப்பப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் ஹார்முஸ் நீரிணையை திறப்பது, கார்க் தீவிலிருந்து எண்ணெய் எடுப்பது மற்றும் ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் நெருக்கடிக்கு மத்தியில் அவசரமாக கூடுகிறது கோப்ரா கூட்டம்

  • March 30, 2026
  • 0 Comments

போர் பதற்றம் காரணமாக நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் ஸ்டார்மர் நாளை மேலும் ஒரு அவசரகால கோப்ரா (COBRA) கூட்டத்திற்குத் தலைமை தாங்கவுள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசு தன்னுடைய இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி இன்று வளைகுடா பகுதிக்குப் பயணம் மேற்கொண்டு, நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். குறிப்பாக, பிரித்தானியா வழங்கக்கூடிய தற்காப்பு ஆதரவு குறித்தும் […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் சீன தூதரக திட்டம் – நீதித்துறை மீளாய்வுக்கு அனுமதி

  • March 30, 2026
  • 0 Comments

மத்திய லண்டனில் சீனாவின் புதிய தூதரகம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதித்துறை மீளாய்வை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முன்வைத்த கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். ராயல் மின்ட் நீதிமன்றம் பகுதியில் இந்த தூதரகம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு கடந்த ஜனவரியில் அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் முக்கிய விசாரணை ஜூலை மாத தொடக்கத்தில் நடைபெற […]

உலகம் செய்தி

ஈரானில் பிரிட்டன் படை களமிறங்காது: பிரதமர் திட்டவட்டம்!

  • March 30, 2026
  • 0 Comments

தமது நாட்டு படையினரை ஈரானுக்கு அனுப்பபோவதில்லை என்று பிரிட்டன் பிரதமர் Keir Starmer தெரிவித்தார். பிராந்தியத்தில் உள்ள தற்காப்பு நலன்களையும் நட்பு நாடுகளையும் பாதுகாப்பதே பிரிட்டனின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போரில் நேரடியாக பங்கேற்காவிட்டாலும் ஈரான் தொடர்பான இலக்குகளைத் தாக்க அமெரிக்காவிற்குத் தனது படைத்தளங்களைப் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் சுமூகமான போக்குவரத்தை உறுதி செய்யத் தொடர்ந்து முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகம் செய்தி

‘போர் நிறுத்தம்’ – அமெரிக்காவின் கோரிக்கைகள் நியாயமற்றவை: ஈரான்

  • March 30, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே எவ்வித நேரடிப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என ஈரான் வெளிவிவகார அமைச்சு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இடைத்தரகர்கள் வழியாக அமெரிக்கா விடுத்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமற்றவை மற்றும் வரம்பு மீறியவை என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் Esmaeil Baghaei தெரிவித்தார். தனது நிலைப்பாட்டில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும், எனினும், அமெரிக்கா தனது கருத்துக்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அண்டை நாடுகளின் அமைதி முயற்சிகளை ஈரான் மதித்தாலும், […]

இலங்கை செய்தி

பாரிய நிதி மோசடி -அதிரடியாக நாடு கடத்தப்பட்ட 125 சீனப் பிரஜைகள்

  • March 30, 2026
  • 0 Comments

இலங்கையில் இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 125 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சீன அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட விசேட விமானம் மூலம் அவர்கள் நாடு கடத்தப்பட்டதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 17ஆம் திகதி அநுராதபுரம் பகுதியில் உள்ள பல விடுதிகளில் தங்கியிருந்து இணையதளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், குறித்த சீனப் […]

இலங்கை

கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

  • March 30, 2026
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் இன்று (30) பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுடன் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார். இதேவேளை, காரில் இருந்த இருவர் 500 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

மத்திய கிழக்கு மோதலில் பிரித்தானியா மேலும் தலையிடாது -பிரதமர்

  • March 30, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் மோதலில் பிரித்தானியா மேலும் தலையிடாது என பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். வோல்வர்ஹாம்டனில் (Wolverhampton)தொழிலாளர் கட்சியின் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போதே அவர் இதனைக் கூறினார். உலக நிலைமை தற்போது நிச்சயமற்றதாக உள்ளதெனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல் நமது போர் அல்ல என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் நிலையில், தற்போது ஈரான் தொடர்பான புதிய மோதல் உலகளவில் […]