ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தின் முன்னாள் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

  • May 21, 2024
  • 0 Comments

முன்னாள் உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன், அமைதியான போராட்டங்களை காவல்துறைக்கு எளிதாக்கும் வகையில் சட்ட விரோதமாகச் செயல்பட்டதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் தனது அதிகாரத்திற்கு புறம்பாக செயல்பட்டதாகவும், எதிர்ப்பாளர்கள் மீதான வழக்குகளை மூன்றில் ஒரு பங்காக அதிகரிக்கக்கூடிய விதிமுறைகள் குறித்து முறையாக ஆலோசனை செய்ய தவறியதாகவும் கண்டறியப்பட்டது. நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அரசாங்கம் காவல்துறையினரால் கட்டுப்படுத்தப்படக்கூடிய எதிர்ப்பு வகையை மறுவரையறை செய்து, மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு “சிறியதை விட அதிகமாக” தடையாக இருக்கும் இடத்தில் […]

ஆசியா செய்தி

பாதுகாப்பின்மை காரணமாக ரஃபாவில் உணவு விநியோகம் இடைநிறுத்தம்

  • May 21, 2024
  • 0 Comments

பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சி (UNRWA) காசாவின் தெற்கு நகரமான ரஃபாவில் பாதுகாப்பின்மை காரணமாக உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறது. UNRWA தனது 24 சுகாதார மையங்களில் ஏழு மட்டுமே செயல்படுவதாகவும், ரஃபா மற்றும் கரேம் அபு சலேமில் “இடையூறுகள்” காரணமாக கடந்த 10 நாட்களில் மருத்துவப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் X இல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்தது, இஸ்ரேல் இந்த மாத தொடக்கத்தில் எகிப்துடனான ரஃபா […]

இந்தியா செய்தி

யாழில் வீடு புகுந்து சண்டித்தனம்! கனடாவிலிருந்து வந்த இருவர் கைது

  • May 21, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை (20) அத்துமீறி நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் கனடா நாட்டில் […]

இந்தியா செய்தி

இலங்கையில் இருந்து இந்தியா சென்ற ஐஎஸ்ஐஎஸ் – வெளியான திடுக்கிடும் தகவல்கள்

  • May 21, 2024
  • 0 Comments

இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு கூட தயாராக இருந்ததாக குஜராத் பொலிஸ்மா அதிபர் விகாஷ் சாஹே தெரிவித்துள்ளார். இந்த நான்கு பயங்கரவாதிகளும் நீர்கொழும்பு மற்றும் கொழும்பு பகுதிகளில் வசிப்பவர்கள் என குஜராத் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கில் இந் நாட்டிலிருந்து அகமதாபாத் நகருக்கு வந்த இலங்கையை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் கடுமையான தாக்குதல் – ஏழு பேர் பலி

  • May 21, 2024
  • 0 Comments

பாலஸ்தீன மேற்குக் கரையில் உள்ள ஜெனின் நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு மருத்துவர் மற்றும் ஆசிரியர் உட்பட 7 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெனின் நகரில் இயங்கி வரும் ஆயுதமேந்திய கும்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ், ஃபத்தா, இஸ்லாமிய ஜிஹாத் போன்ற ஆயுதக் குழுக்கள் நகரில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த மருத்துவர் மற்றும் ஆசிரியர் சேவை நிலையங்களுக்குச் செல்லும் போது தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

வாகன இறக்குமதி குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்

  • May 21, 2024
  • 0 Comments

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், வாகன இறக்குமதியை இனியும் மூடி வைக்க அரசாங்கம் தயாராக இல்லை என தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், “நாட்டில் எமக்கு ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க, ஒரு டொலர் கூட இல்லாத நிலையில் இருந்தோம். அதனால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களைின் இறக்குமதியை நிறுத்த வேண்டியதாயிற்று. எனினும், தற்போது […]

செய்தி விளையாட்டு

LPL வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட மதீஷ பத்திரன

  • May 21, 2024
  • 0 Comments

இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன லங்கா பிரீமியர் லீக் (LPL) ஏலத்தில் மிகவும் விலையுயர்ந்த வீரரானார், அவர் 120,000 டாலர்களுக்கு கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸால் வாங்கப்பட்டார். 21 வயதான,ஸ்லிங்கிங் டெலிவரி பாணியைக் கொண்டவர் கடந்த ஆண்டு டி20 போட்டித் தொடரில் தில்ஷன் மதுஷங்க நிர்ணயித்த $92,000 தொகையை முறியடித்தார். ஒரு சுவாரஸ்யமான நிகழ்வுகளில், மதீஷா பஹித்ரனா தனது அடிப்படை விலையான 50,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் நுழைந்ததை அடுத்து, தம்புள்ளை உரிமையானது 70,000 அமெரிக்க டாலர்களுக்கு […]

இலங்கை செய்தி

இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்ய அனுமதிக்க மாட்டோம் – அலி சப்ரி

  • May 21, 2024
  • 0 Comments

பொறுப்புள்ள அண்டை நாடான இலங்கை, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்காது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்திய செய்தி சேனல் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது தொடர்பில் இந்தியாவின் கரிசனையைக் கருத்தில் கொண்டு, ஏனைய நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், வெளிப்படையான முறையில் நட்பு நாடுகளுடன் உறவுகளைப் பேணுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். “நாங்கள் ஒவ்வொரு நாட்டுடனும் ஒத்துழைக்க […]

இலங்கை செய்தி

ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டு மாணவர் வைத்தியசாலையில் அனுமதி

  • May 21, 2024
  • 0 Comments

பொலன்னறுவை கல்வி வலயத்திற்குட்பட்ட விஜிதா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், அப்பாடசாலை ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டு புலஸ்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. தலையில் அடிபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இன்று (21) அனுமதிக்கப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் புலஸ்திகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை செய்தி

பதவிய ஓமரகட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

  • May 21, 2024
  • 0 Comments

பதவிய ஓமரகட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காலில் பலத்த காயங்களுக்கு உள்ளான ஒருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓமரகட, பதவிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். இதன் தாக்குதலில் குறித்த நபரின் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், காயமடைந்த நபருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டவரின் அருகில் வசிக்கும் 19 வயதுடைய மீனவ இளைஞரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் […]