இலங்கை செய்தி

ரூபாயின் தொடர் சரிவு : அதிகரித்த வாழ்க்கை செலவால் திண்டாடும் மக்கள்!

  • May 15, 2026
  • 0 Comments

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்தால், எதிர்காலத்தில் எரிபொருள் விலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணங்கள், அத்துடன் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 331 ரூபாயை தாண்டியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட   பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ, மத்திய வங்கி புழக்கத்தில் உள்ள டொலர்களை வாங்குவதால் டொலர்களுக்கான தேவை அதிகரித்ததும், புழக்கத்தில் ரூபாய் அதிகமாக இருப்பதும் ரூபாயின் மதிப்பு சரிவுக்கு வழிவகுத்துள்ளதாகக் கூறினார். […]

உலகம்

ஃபுஜைரா வழியாக எண்ணெய் ஏற்றுமதி : அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் உத்தரவு!

  • May 15, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகம், 2027-ஆம் ஆண்டுக்குள் ஃபுஜைரா வழியாகத் தனது ஏற்றுமதித் திறனை இரட்டிப்பாக்கும் நோக்கில், ஒரு புதிய எண்ணெய் குழாய் அமைக்கும் பணியை விரைவுபடுத்தி வருகிறது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத், மேற்கு-கிழக்கு குழாய் திட்டத்தை விரைவுபடுத்துமாறு அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு (ADNOC) உத்தரவிட்டுள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியை தவிர்ப்பதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் ஏற்கனவே அபுதாபி கச்சா எண்ணெய் குழாய் […]

இலங்கை

16 வயது சிறுமி கடத்தல் : மட்டக்களப்பில் பரபரப்பு!

  • May 15, 2026
  • 0 Comments

மட்டக்களப்பில் 16 வயது சிறுமி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து கடத்த முற்பட்ட சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. தமது தந்தையுடன் மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வகுப்பு ஒன்றுக்காக சென்ற சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். குறித்த தனியார் வகுப்பு நேற்று இடம்பெறாததன் காரணமாக தந்தை மட்டக்களப்பு நகரில் உள்ள தமது உறவினர் வீடொன்றுக்கு அருகில் சிறுமியை விட்டு  சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் குறித்த சிறுமி அந்த உறவினர் வீட்டை சென்றடையவில்லை என, அவருடைய தந்தைக்கு தகவல் […]

உலகம் செய்தி

தைவானை பாதுகாக்குமா அமெரிக்கா? ட்ரம்பிடம் நேரில் வினா தொடுத்த சீன ஜனாதிபதி!

  • May 15, 2026
  • 0 Comments

சீன ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது, தைவான் விவகாரம் குறித்து தான் எந்தவொரு உறுதிமொழியையும் வழங்கவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீன விஜயத்தை நிறைவு செய்து வாஷிங்டன் திரும்பும் வழியில் விமானத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தைவானுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அமெரிக்கா அதைப் பாதுகாக்குமா என்று சீன ஜனாதிபதி தன்னிடம் நேரடியாகக் கேட்டதாகவும், அதற்கு “நான் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை” என்று பதிலளித்தாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]

இந்தியா செய்தி

ஐ.நாவின் செயல்திறன் சரிந்துவிடும்: இந்தியா எச்சரிக்கை!

  • May 15, 2026
  • 0 Comments

ஐ.நா. பாதுகாப்பு சபையை மறுசீரமைப்பதற்குரிய காலம் கடந்துவிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடும் விசனம் வெளியிட்டுள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. மேற்படி அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். இதன்போது உரையாற்றுகையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “பாதுகாப்பு சபை உட்பட ஐநாவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியம். ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தரமற்ற […]

இலங்கை செய்தி

வடக்கில் ஆசிரியர் இடமாற்றத்தில் ஊழல்: யாழில் போராட்டம்!

  • May 15, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் இடமாற்றச் சபையின் விதிகளை மீறி, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்களைக் கண்டித்து, யாழ். ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன், “வடக்கு மாகாணக் கல்வியைத் திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசும், ஊழல் கல்வி அதிகாரிகளும் […]

ஐரோப்பா

மற்றுமொரு நேட்டோ நாடு மீதும் குறி : துருப்புக்களை அனுப்ப மறுப்பு!

  • May 15, 2026
  • 0 Comments

போலந்திற்கு 4,000 அமெரிக்கப் படைகளை அனுப்பும் முடிவை பென்டகன் மாற்றியமைத்துள்ளது. நேட்டோவில் எழுந்துள்ள விரிசல் நிலை காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான பாதுகாப்பை பென்டகன் குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெர்மனியில் இருந்து 5000 துருப்புகளை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது போலந்திற்கான இராணுவத்தை அனுப்புவதிலும் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது. ஈரான் போர் தொடர்பாக டொனால்ட் ட்ரம்பிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே விரிவடைந்து வரும் பிளவை  இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். பென்டகன் இது […]

ஐரோப்பா

இரவோடு இரவாக மோதிக்கொண்ட உக்ரைன் – ரஷ்யா : பற்றி எரிந்த ஆலை!

  • May 15, 2026
  • 0 Comments

உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து  ரியாசானில் உள்ள ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதளில் ரியாசனில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் காயமைடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உக்ரேனின் ஆளில்லா விமானப் படைத் தளபதி ராபர்ட் ப்ரோவ்டி (Robert Brovdi) மேற்படி தாக்குதலை உறுதிப்படுத்தினார். அதேநேரம் உக்ரேனில் உள்ள  23 இராணுவ இலக்குகள் மற்றும் வசதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே 355 […]

ஐரோப்பா

பின்லாந்தின் ஹெல்சிங்கி விமான நிலையத்தில் சேவை நிறுத்தம்!

  • May 15, 2026
  • 0 Comments

பின்லாந்தின் ஹெல்சிங்கி (Helsinki) விமான நிலையத்தில் இன்று வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்லாந்தின் வான்வெளியில் ட்ரோன் விமானங்கள் பறப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் பெட்டேரி ஓர்போ (Petteri Orpo)  அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். பின்னர், உள்துறை அமைச்சர் மாரி ரந்தனென் (Mari Rantanen), ஆபத்து நீங்கிவிட்டதாகவும், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் உறுதிப்படுத்தினார். இதனையடுத்து விமான சேவைகள் வழக்கம்போல் இயக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

காங்கோவில் மீண்டும் பரவும் எபோலா வைரஸ் தொற்று – ஒருவர் பலி!

  • May 15, 2026
  • 0 Comments

காங்கோவின்  இடுரி (Ituri) மாகாணத்தில் ஒரு புதிய எபோலா பரவல் ஏற்பட்டுள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த பரவலால் 65 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  இதுவரை 246 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காங்கோவின் முந்தைய எபோலா தொற்றுநோய் முடிவடைந்து 05 மாதங்களுக்கு பிறகு  தொற்றுபாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், 1976-ஆம் ஆண்டிலிருந்து நாட்டில் ஏற்படும் 17-வது வைரஸ் பரவல் இதுவாகும். எபோலா என்பது உடல் திரவங்கள் மூலம் பரவும், எளிதில் தொற்றக்கூடிய மற்றும் […]