பின்லாந்தின் ஹெல்சிங்கி விமான நிலையத்தில் சேவை நிறுத்தம்!
பின்லாந்தின் ஹெல்சிங்கி (Helsinki) விமான நிலையத்தில் இன்று வான்வழிப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பின்லாந்தின் வான்வெளியில் ட்ரோன் விமானங்கள் பறப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனையடுத்து பிரதமர் பெட்டேரி ஓர்போ (Petteri Orpo) அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர், உள்துறை அமைச்சர் மாரி ரந்தனென் (Mari Rantanen), ஆபத்து நீங்கிவிட்டதாகவும், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும் உறுதிப்படுத்தினார்.
இதனையடுத்து விமான சேவைகள் வழக்கம்போல் இயக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.




