மாவோயிஸ்டிற்கு எதிரான தாக்குதல் : குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக இந்திய படையினர் அறிவிப்பு!
நாட்டின் காடுகள் நிறைந்த மையப்பகுதியில் கிளர்ச்சியாளர் குழுக்களுக்கு எதிரான தாக்குதலில் குறைந்தது 31 சந்தேகத்திற்குரிய மாவோயிஸ்ட் கெரில்லாக்களை கொன்றதாக இந்திய பாதுகாப்புப் படைகள் கூறின. 21 நாள் நடவடிக்கை மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு “வரலாற்று திருப்புமுனை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். “நக்சலைட்டுகள்” என்றும் அழைக்கப்படும் மாவோயிஸ்ட் கெரில்லாக்கள், நான்கு தசாப்தங்களாக இந்திய அரசாங்கத்திற்கு எதிராக, முக்கியமாக சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கிளர்ச்சி செய்து வருகின்றனர். ஏப்ரல் 21 […]













