ஆசியா

சீனாவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகிய நிலநடுக்கம்

  • June 5, 2025
  • 0 Comments

சீனாவின் யுனான் வட்டாரத்தில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் நிலநடுக்கக் கட்டமைப்பு நிலையம் தெரிவித்தது. பொருட்சேதமோ உயிருடற்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. நிலவரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டன. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. யுனான் வட்டாரத்தைச் சுற்றிய 200 கிலோமீட்டர் தூரத்தில், கடந்த ஐந்தாண்டுகளில் 118 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இலங்கை

கொழும்பில் ரயில் மோதி தம்பதியினர் உயிரிழப்பு

  • June 5, 2025
  • 0 Comments

கொழும்பு – தெஹிவளை ரயில் மார்க்கத்தில் நடந்து சென்ற தம்பதியர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை கொழும்பு கோட்டையிலிருந்து அளுத்கம நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பதுளை, பதுலுபிட்டியவில் வசிக்கும் 58 மற்றும் 59 வயதுடைய தம்பதியர் ஆவர். சடலங்கள் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்வியல்

உடல் எடையை அதிகரிக்க சில எளிய மருத்துவம்..!

  • June 5, 2025
  • 0 Comments

மெலிந்த தேகம் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் சற்று பருமனாவது குறித்து பார்க்கலாம். வெண்பூசணி, உலர் திராட்சை, வெல்லம் ஆகியவை உடல் எடையை அதிகரிக்க செய்யும் தன்மை கொண்டவை. இவைகளை பயன்படுத்தி மருந்துகள் தயாரிக்கும் முறைகளை காணலாம். செய்முறை : இதற்கு தேவையான பொருட்களாக வெண்பூசணி, உலர் திராட்சை, வெல்லம் மற்றும் நெய் எடுத்துக்கொள்ள வேண்டும். வெண்பூசணியின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு சதை […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மாற்றமடையும் கோவிட் சட்டம்!

  • June 5, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் COVID-19 தனிமைப்படுத்தல் இனி கட்டாயமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது சுவாச நோய் இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தலை நிபுணர்கள் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது. COVID-19, இன்ப்ளூயன்ஸா மற்றும் RSV அனைத்தும் இந்த ஆண்டு இந்த நேரத்தில் செயலில் உள்ளன, இந்த ஆண்டு இதுவரை 196,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. ஒரு புதிய COVID-19 மாறுபாடு, NB.1.8.1, தற்போது சீனா மற்றும் ஹாங்காங்கில் பரவி வருகிறது, மேலும் WHO நிலைமையைக் கண்காணித்து வருகிறது. ஐந்து […]

ஆஸ்திரேலியா

ஜப்பானில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் உயிரிழந்த நிலையில் 100 பூனைகள் கண்டுபிடிப்பு

  • June 5, 2025
  • 0 Comments

தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு விலங்கு நலக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அசுத்தமான வீட்டில் சுமார் 100 உயிரிழந்த பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விலங்கு உதவியாளர் சென்ஜு இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளது, அந்த வீடு அதன் உறுப்பினர்களில் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறியுள்ளது. வீடு குப்பைகளால் நிறைந்ததாகவும், மலம் மற்றும் சிறுநீரால் நிரம்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உரிமையாளர் அமைப்புடன் கலந்தாலோசிக்காமல் அனுமதியின்றி பூனைகளை உள்ளே அழைத்துச் சென்றதாக குழு தெரிவித்துள்ளது. விலங்கு உதவியாளர் சென்ஜு பூனைகள் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையத் தடை

  • June 5, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்திருக்கிறார். ஆப்கானிஸ்தான், மியன்மார், சாட், காங்கோ, ஈக்குவடோரியல் கினி, எரித்ரியா, ஹெயிட்டி, ஈரான், லிப்யா, சோமாலியா, சுடான், யெமன் ஆகிய நாடுகளிலிருந்து வரும் மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முழுத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது X கணக்கில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், “எங்களுக்கு தீங்கு செய்ய விரும்பும் நபர்கள் எங்கள் நாட்டிற்குள் நுழைய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று […]

விளையாட்டு

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் நடந்தது என்ன? 11 பேர் பலி – 33 பேர் கவலைக்கிடம்

  • June 5, 2025
  • 0 Comments

18 ஆண்டுகளில் முதல்முறையாக பெங்களூரு அணியினர் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற ஆர்சிபி அணி வீரர்களை வாழ்த்த பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை காண ஆயிரக்கணக்கில் கட்டுக்கடாங்காமல் ரசிகர்கள் கூடியதால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஐபிஎல் தொடங்கி 18 சீசன்கள் முடிந்துவிட்டன. முதல் சீசனிலிருந்தே கோப்பைக்காக போராடி வந்த ஆர்சிபி அணியின் கனவு, 17 சீசன்களாக […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

  • June 5, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேலும், ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வேலை செய்யாமல் ஏமாற்றும் வெளிநாட்டவர்களுக்கு உதவித்தொகை பறிபோகும் ஆபத்து

  • June 5, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் அதிமான புலம்பெயர்ந்தோர் குடிமக்கள் உதவித்தொகையை நம்பியே வாழ்க்கை நடத்துவதாக CDU கட்சியின் தலைவர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். இது நாட்டில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் இந்த சூழ்நிலையை நீண்ட காலத்திற்கு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கருதுகின்றார். ஜெர்மனியில் உள்ள சுமார் 40 சதவீதம் அகதிகள் மற்றும் உக்ரைனியர்கள் வேலைக்கு செல்வதில்லை. இந்நிலையில், அவர்கள் பெரும்பாலும் குடிமக்கள் உதவித்தொகையை பெறுகின்றார்கள். தங்கள் புகலிடம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அவர்கள் இந்த ஆதரவைப் […]

ஆசியா

ஜப்பானில் குழந்தைப் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி

  • June 5, 2025
  • 0 Comments

ஜப்பானில் குழந்தைப் பிறப்பு விகிதம் 9ஆவது ஆண்டாக இதுவரை இல்லாத அளவு குறைந்தது. ஜப்பானின் மொத்தக் கருத்தரிப்பு விகிதம் கடந்த ஆண்டு 1.15க்குக் குறைந்தது. அதற்கு முந்திய ஆண்டு அது 1.2ஆக இருந்தது. 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு அது ஆகக்குறைவான விகிதமாகும். ஓராண்டுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 700,000க்குக் கீழ் பதிவானது. இளம்பெண்கள் குறைவாக இருப்பதும் தாமதமாகத் திருமணம் புரிவதும் மக்கள்தொகை குறைய முக்கியக் காரணங்கள் என்று ஜப்பானியச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. பிறப்பு விகிதத்தை உயர்த்த […]