ஐரோப்பா செய்தி

பிரிட்டனுக்குள் பிரிவினையைத் தூண்ட Elon Musk முயற்சி: பிரதமர் Keir Starmer குற்றச்சாட்டு!

  • June 4, 2026
  • 0 Comments

அமெரிக்கத் தொழிலதிபர் இலோன் மஸ்க் பிரிட்டனுக்குள் பிரிவினையைத் தூண்ட முயல்கிறார் என்று பிரதமர் கீர் ஸ்டார்மர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். பிரிட்டனின் தெற்கு நகரமான சவுதாம்ப்டனில் Southampton கடந்த டிசம்பர் மாதம் 18 வயதுடைய ஹென்றி நோவாக் என்ற மாணவர், 23 வயதுடைய விக்ரம் திக்வா என்பவரால் கத்தியால் குத்தப்பட்டார். கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான ஹென்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது கைகளில் விலங்கிட்ட விவகாரம் தற்போது பிரிட்டன் அரசியலில் […]

உலகம்

அமெரிக்கன் ஏர்லைன்ஸின் திடீர் அறிவிப்பு : விமான சேவைகள் இரத்து!

  • June 4, 2026
  • 0 Comments

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஜெட் எரிபொருள் விலை உயர்வு காரணமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஈரானில் நடந்து வரும் போரினால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விமானத்திற்கான ஜெட் எரிபொருளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு விமான நிறுவனத்தின் மொத்த இயக்கச் செலவுகளில் 25-30 சதவீதம் ஜெட் எரிபொருளுக்காகவே செலவிடப்படுகிறது, இது ஒரு குறிப்பிடத்தக்க செலவினமாகும். இதன் காரணமாக பல விமான நிறுவனங்கள் […]

உலகம்

குழந்தைகள் கண் முன்னே பெண் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!

  • June 4, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரெஞ்சு பெண் ஒருவரை அவரது குழந்தைகள் முன்பே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி பிரெஞ்சு சுற்றுலாப் பயணியின் காரில் பெட்ரோல் தீர்ந்த நிலையில், நள்ளிரவு வேளையில் அவதியுற்றுள்ளார். இதன்போது ​​அபித் அலி (Abid Ali) மற்றும் ஷத்கத் அலி (Shadqat Ali) ஆகியோர் அவரையும், அவரது குழந்தைகளையும் அருகில் உள்ள வயல் ஒன்றுக்கு இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து […]

இந்தியா செய்தி

பிரதமர் மோடியை சந்தித்தார் வெனிசுலா பதில் ஜனாதிபதி!

  • June 4, 2026
  • 0 Comments

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெனிசுலா தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேச்சு நடத்தினார். அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் மேற்படி சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன. மேலும், எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பை […]

இலங்கை செய்தி

திருமலையில் விவசாயியின் சைக்கிளை திருடியவருக்கு விளக்கமறியல்!

  • June 4, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளை, திருடிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொரவெவ கமநல சேவைகள் திணைக்களத்தில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சென்ற விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு களவாடப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிள் உரிமையாளர் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் CCTV காட்சிஉதவியுடன் […]

இலங்கை செய்தி

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்: தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார்!

  • June 4, 2026
  • 0 Comments

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸாரினால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் வித்தாக நஞ்சருந்தி தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, உரும்பிராயில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலையடியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

ஸ்பெயின் – பிரபல சுற்றுலாத் தளத்தில் காட்டுத்தீ!! முகாமிடும் படையினர்!

  • June 4, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தளமான முர்சியாவின் Murcia லாஸ் காரெஸில் (Los Garres) பரவிய காட்டுத்தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக சுமார் 100 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது இருப்பிடம் திரும்பியுள்ளனர். அத்துடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் தீயைக் கட்டுப்படுத்தும்  நடவடிக்கையில், இராணுவப் பிரிவுகள், விமானங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அவசரகாலப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதேசமயம் மீளவும் தீ விபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் […]

இலங்கை செய்தி

சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு!

  • June 4, 2026
  • 0 Comments

கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில், உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை இன்று நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் சொல்லிசை கலைஞரான சங்கீதன், அண்மையில் விடுதலைப்புலிகளின் பாடலொன்றை மீளுருவாக்கம் செய்து பாடினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாதுகாப்புப் […]

உலகம்

எவரெஸ்ட் சிகரத்தின் மரண மண்டலத்தில் மாயமான நபர் 07 நாட்களின்பின் உயிருடன் மீட்பு!!

  • June 4, 2026
  • 0 Comments

எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன 52 வயதான நேபாள மலையேற்ற வழிகாட்டி ஹிலாரி தாவா ஷெர்பா ஒரு வாரத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டு மலையேற்றப் பருவத்தின் இறுதி தருணத்தில் மரண மண்டல பகுதியில் வைத்து அவர் மாயமானதாக கூறப்படுகிறது. கடந்த ஏழு நாட்களாக  ஆக்ஸிஜன், உணவு, தண்ணீர் எதுவும் இன்றி  உயிர் பிழைத்திருந்த அவர், ‘அடிவார முகாமுக்கு அருகில்’ கண்டுப்பிடிக்கப்படதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.    

ஐரோப்பா முக்கிய செய்திகள்

UKவில் மாணவர் விசாவை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை!

  • June 4, 2026
  • 0 Comments

விசா முறைகேடுகளில் ஈடுபடும் சர்வதேச மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து தடை  செய்யக்கூடிய புதிய சீர்திருத்தங்களை பிரித்தானிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கற்றல் நோக்கத்தோடு பிரித்தானியாவிற்குள் நுழைபவர்கள் அந்த விசாக்களை துஷ்பிரயோகம் செய்வது இனங்காணப்பட்டதை தொடர்ந்தே  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது அந்த விசாக்கள் புகலிடம் கோருவதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை கடுமையாக்க  தற்போது புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்காகக் குறைந்தபட்சம் 90 சதவீதப் பாட நிறைவு விகிதத்தையும் 95 […]