தேர்தலில் படுதோல்வியடைந்த போதிலும், பதவியில் நீடிக்க உறுதியளித்துள்ள ஜப்பான் பிரதமர்
ஜப்பானில் நடைபெற்ற மேலவைத் தேர்தலில் ஆளும் கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, கூட்டணிக்குத் தலைமை தாங்கிய ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா, தமது கட்சியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.இருப்பினும், பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்கப்போவதாக இஷிபா தெரிவித்துள்ளார். அமெரிக்க வரிவதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இருப்பதாக அவர் கூறினார். அதுமட்டுமல்லாது, அதிகரித்து வரும் பயனீட்டாளர் விலை போன்ற முக்கிய விவகாரங்களைக் கண்காணித்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இலக்கு கொண்டுள்ளதாக இஷிபா தெரிவித்தார். இஷிபா தொடர்ந்து பிரதமராக இருப்பது குறித்து […]













