ஐஸ்வர்யா ராய் வழியில் சென்ற நாகர்ஜுனா : உயர் நீதிமன்றம் கொடுத்த உறுதி
நடிகர் நாகர்ஜுனா தனது தனியுரிமை பாதுகாக்க கோரி தொடர்ந்த வழக்கில் உரிய உத்தரவுகளை பிறப்பிப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. போலியான இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் உரிய அனுமதி இல்லாமல் புகைப்படம் வீடியோ பெயர் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதாக நடிகை ஐஸ்வர்யா ராய், அவரது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் அனில் கபூர் உள்ளிட்டோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் அனுமதியின்றி பயன்படுத்தப்படும் புகைப்படம் ,பெயர், வீடியோ உள்ளிட்டவற்றை நீக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]













