செய்தி வட அமெரிக்கா

கரீபியன் கடலில் மீண்டும் ஒரு படகை தாக்கிய அமெரிக்கப் படைகள் – நால்வர் மரணம்

  • October 3, 2025
  • 0 Comments

கரீபியன் கடலில் ஒரு படகில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாக குற்றம் சாட்டி, அமெரிக்கா நான்காவது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். மேலும், “கப்பலில் இருந்த நான்கு பயங்கரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டனர், இந்த நடவடிக்கையில் எந்த அமெரிக்கப் படைகளும் பாதிக்கப்படவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக தளமான Xல், வெனிசுலா கடற்கரைக்கு அருகில் நடந்த தாக்குதலின் வீடியோவை ஹெக்செத் பகிர்ந்து சம்பவத்தை உறுதிப்படுத்தினார். கடந்த மாதம் இதேபோன்ற மூன்று அமெரிக்க வான்வழித் தாக்குதல்களை […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

  • October 3, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவிற்கான அமெரிக்க அமைதித் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க நேரப்படி 18:00 மணிக்குள் ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். “இந்த கடைசி வாய்ப்பு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இதற்கு முன்பு யாரும் கண்டிராத அளவுக்கு ஹமாஸுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும்” என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த அமைதி திட்டத்தில், சண்டையை […]

இந்தியா செய்தி

கர்நாடகாவில் 12 வயது மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பெண்

  • October 3, 2025
  • 0 Comments

கர்நாடகாவின் சிவமொக்காவில் 38 வயது பெண் ஒருவர் தனது 12 வயது மகளைக் கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அரசு மருத்துவமனையின் செவிலியர் குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரியும் ஸ்ருதியின் கணவர் இரவுப் பணி முடிந்து வீடு திரும்பியபோது சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரியவந்துள்ளது ஸ்ருதி மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸார் கொலை மற்றும் இயற்கைக்கு மாறான மரணம் ஆகிய பிரிவுகளில் […]

ஐரோப்பா செய்தி

இத்தாலியில் சாலை விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட மூவர் மரணம்

  • October 3, 2025
  • 0 Comments

இத்தாலியின் க்ரோசெட்டோ அருகே நடந்த விபத்தில் நாக்பூரைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாக இத்தாலியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. க்ரோசெட்டோவில் உள்ள ஆரேலியா மாநில சாலையின் வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில் ஆசிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேனும் ஒன்பது இருக்கைகள் கொண்ட மினிபஸும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்” என்று இத்தாலியில் உள்ள […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டன் திருச்சபையை வழிநடத்தும் முதல் பெண் பேராயர் சாரா முல்லல்லி

  • October 3, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கேன்டர்பரியின் புதிய பேராயராக சாரா முல்லல்லி நியமிக்கப்பட்டுள்ளார். 1,400 ஆண்டுகால இங்கிலாந்து திருச்சபையின் தலைவராக ஒரு பெண் நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். மேலும், உலகம் முழுவதும் 85 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட ஆங்கிலிகன் ஒன்றியத்தை வழிநடத்தும் முதல் பெண்மணியாக நியமிக்கப்பட்டுள்ளார். தனது முதல் பொது உரையில் மான்செஸ்டரில் ஜெப ஆலயத்தின் மீது நடந்த கொடிய தாக்குதலின் கொடூரமான வன்முறையை கண்டித்து, வெறுப்பும் இனவெறியும் நம்மைப் பிரிக்க முடியாது என்று சாரா முல்லல்லி குறிப்பிட்டுள்ளார். […]

இந்தியா செய்தி

பீகாரில் வந்தே பாரத் ரயில் மோதி நான்கு பேர் மரணம்

  • October 3, 2025
  • 0 Comments

பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் உள்ள ஜோக்பானியில் இருந்து வந்த அதிவேக வந்தே பாரத் ரயில் மோதி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பட்லிபுத்ரா நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த ரயில் பூர்னியா சந்திப்பு அருகே ஐந்து பேர் மீது மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் பூர்னியா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, கஸ்பா – பூர்னியா சந்திப்புக்கு இடையே அதிகாலையில் […]

செய்தி விளையாட்டு

INDvsWI Test – இரண்டாம் நாள் முடிவில் 448 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி

  • October 3, 2025
  • 0 Comments

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியா சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் […]

பொழுதுபோக்கு

‘நிர்வாணப் படத்தை அனுப்பு’: அக்‌ஷய் குமார் மகளிடம் அத்துமீறல்

  • October 3, 2025
  • 0 Comments

நடிகர் அக்‌ஷய் குமாரின் மகளிடம் ஆடைகளைக் களைந்துவிட்டு இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றச் சொல்லி இணையவழியில் சில மர்ம நபர்கள் எல்லை மீறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போனில் இணையவழி விளையாட்டில் ஈடுபட்டிருந்த அக்‌ஷய் குமாரின் மகளிடம் ‘உன்னுடைய நிர்வாணப் படத்தை பதிவேற்று’ என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டதைப் பார்த்து தான் அதிர்ச்சியடைந்ததாக அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் அக்‌ஷய் குமார் கூறியிருப்பதாவது: “எனது மகள் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்மார்ட்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் […]

ஐரோப்பா

உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஒரே இரவில் பெரிய அளவிலான தாக்குதலை நடத்திய ரஷ்யா

  • October 3, 2025
  • 0 Comments

உக்ரைனின் இராணுவ-தொழில்துறை வளாகம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிராக ரஷ்யப் படைகள் ஒரே இரவில் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் நிலம், வான் மற்றும் கடல் பகுதிகளில் இருந்து ஏவப்பட்ட நீண்ட தூர துல்லிய ஆயுதங்கள் மற்றும் போர் ட்ரோன்கள் ஈடுபட்டதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. உக்ரைன் விமானப்படையின் கூற்றுப்படி, தாக்குதலின் போது ரஷ்யா 381 போர் மற்றும் ஏமாற்று ட்ரோன்கள் மற்றும் 35 ஏவுகணைகளை […]

இலங்கை

‘பெலியட் சனாவை’ தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ள தங்காலை நீதவான் நீதிமன்றம்

  • October 3, 2025
  • 0 Comments

தங்காலை, சீனிமோதராவில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் தொகை தொடர்பாக கைது செய்யப்பட்ட ‘பெலியட்டா சனா’ என்றும் அழைக்கப்படும் சனத் வீரசிங்கவை தடுத்து வைத்து விசாரிக்க தங்காலை நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கூடுதல் நீதவான் விதுர வீரகோன், சந்தேக நபரை அக்டோபர் 9 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி அளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் அக்டோபர் 1 ஆம் […]