ஆசியா செய்தி

சீனாவில் K-விசா திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு – வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் அதிருப்தி

  • October 4, 2025
  • 0 Comments

சீன அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய K-விசா திட்டம் உள்ளூர் இளைஞர்களிடம் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலையின்றி தவிக்கும் இளம் பட்டதாரிகள் ஏற்கனவே வேலை தேட சிரமப்படும் சூழலில், இந்த விசா திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உலகத் தரத்திலான நிபுணர்களை ஈர்ப்பதற்காக ஒக்டோபர் முதலாம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விசா வகை, சீனாவின் வளர்ச்சிக்கு ஆதாரமாகும் என அதிகாரிகள் கூறினாலும், சமூக ஊடகங்களில் இது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இளைஞர்களின் வேலையின்மை 19 […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் AI உதவியுடன் கோடீஸ்வரர்களான சகோதரர்கள்

  • October 4, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் AI உதவியுடன் கோடீஸ்வரர்களான சகோதரர்கள் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. சிட்னியை தளமாகக் கொண்ட Iren எனப்படும் கணினி நிறுவனம் AI வசதிகளுடனான கணினி சேவையகங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பை 19 பில்லியனாக டொலராக உயர்த்தியுள்ளது. முதலில் பிட்காயின் சுரங்கத்திற்கு நவீன ஆற்றலைப் பயன்படுத்தும் தரவு மைய வணிகமாக தொடங்கிய Iren நிறுவனம், 2023ஆம் ஆண்டு AI சேவையக வாடகை வணிகமாக மாற்றப்பட்டது. சகோதரர்களான டான் மற்றும் வில் ராபர்ட்ஸால் நிறுவப்பட்ட Iren நிறுவனம், […]

ஆஸ்திரேலியா செய்தி

சர்வதேச மாணவர்களை பெரிதும் நம்பியிருக்கும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள்

  • October 4, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களை பெரிதும் நம்பியிருப்பதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய பல்கலைக்கழக விண்ணப்பதாரர்களில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பழமையான பல்கலைக்கழகமான சிட்னி பல்கலைக்கழகம், கடந்த ஆண்டு அதன் மாணவர்களில் பெரும்பாலோர் சர்வதேச மாணவர்கள் என்று தெரிவித்துள்ளது. Group of Eight என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான 8 பல்கலைக்கழகங்களும் 40 –50 சதவீதத்திற்கு இடையில் சர்வதேச மாணவர் எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. […]

செய்தி

டிரம்பின் வற்புறுத்தலின் பேரில் பல செயலிகளை அகற்றிய Apple நிறுவனம்

  • October 4, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகளின் இருப்பிடங்கள் குறித்து எச்சரிக்கும் பல பிரபலமான செயலிகளை Apple நிறுவனம் தனது App Storeஇல் இருந்து நீக்கியுள்ளது. அகற்றப்பட்ட செயலிகளில் மிகவும் முக்கியமானது ICEBlock என்ற பிரபலமான அமெரிக்க செயலியாகும். டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டியும் அடங்குவர். இந்த செயலிகள் மூலம், பயனர்கள் அதிகாரிகளின் இருப்பிடங்களை அநாமதேயமாகக் குறிக்கவும், மற்றவர்களுக்கு விரைவாகத் தெரிவிக்கவும் முடிந்தது. டல்லாஸில் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

கொழும்பு ஹோட்டலில் இரகசியக்கூட்டம் – ஒன்று கூடிய ரணில், நாமல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்

  • October 4, 2025
  • 0 Comments

கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பும் இரவு உணவு விருந்து ஒன்றும் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டமை பலரது அவதானத்திற்குள்ளாகியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தனவின் அழைப்பின் பேரில் 25க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பிரெஞ்சு பத்திரிகையாளர் ஒருவர் மரணம்

  • October 3, 2025
  • 0 Comments

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பிரெஞ்சு புகைப்பட பத்திரிகையாளர் ஒருவர் ட்ரோன் தாக்குதல் மூலம் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் புகைப்பட பத்திரிகையாளர் அன்டோனி லாலிகன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார் மேலும், அதே தாக்குதலில் உக்ரைனிய பத்திரிகையாளர் ஜார்ஜி இவான்சென்கோ காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.. டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ட்ருஷ்கிவ்கா பகுதிக்கு அருகில் இரு நிருபர்களும் இருந்தனர் […]

ஆசியா செய்தி

கம்போடிய எதிர்க்கட்சி அரசியல்வாதியை கொன்ற தாய்லாந்து நபருக்கு ஆயுள் தண்டனை

  • October 3, 2025
  • 0 Comments

பாங்காக்கில் கம்போடிய எதிர்க்கட்சி அரசியல்வாதியைக் கொன்றதற்காக தாய்லாந்து நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கம்போடியாவின் முன்னாள் எதிர்க்கட்சி அரசியல்வாதியான பிரெஞ்சு நாட்டவர் லிம் கிம்யா, ஜனவரி 7ம் திகதி முன்னாள் கடற்படை வீரரான எக்கலக் பேனோய் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். லிம் கிம்யா தனது மனைவி மற்றும் சகோதரருடன் பாங்காக்கிற்கு வருகை தந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூடு நடந்த ஒரு நாளுக்குப் பிறகு எக்கலக் பேனோய் கைது செய்யப்பட்டார், மேலும் அவர் கொலை செய்ததாக […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நிபந்தனைகளுடன் அமெரிக்க ஜனாதிபதியின் அமைதி திட்டத்தின் சில விதிமுறைகளை ஏற்ற ஹமாஸ்

  • October 3, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிட்ட காசாவிற்கான 20 அம்ச அமைதி திட்டத்தின் சில விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. “ஜனாதிபதி டிரம்பின் திட்டப்படி, உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் விடுவிக்க” ஒப்புக்கொண்டதாக இயக்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் காசா பகுதியின் எதிர்காலம் மற்றும் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பரிமாற்றத்தின் […]

ஆசியா செய்தி

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மற்றும் சீனா இடையே ஆரம்பமாகும் நேரடி விமான சேவை

  • October 3, 2025
  • 0 Comments

5 ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தாவிலிருந்து சீனாவின் குவாங்சோவுக்கு இந்த மாதம் 26ம் திகதி முதல் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. 2020ம் ஆண்டுக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டது. கொரோனா தொற்று மட்டுமின்றி இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்கு இந்த மாதம் […]

இந்தியா செய்தி

கர்நாடகாவில் ஏரியில் மூழ்கி 3 குழந்தைகள் மரணம்

  • October 3, 2025
  • 0 Comments

கர்நாடகாவின் சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் உள்ள அச்சேபள்ளி கிராமத்தில் உள்ள ஒரு ஏரியில் மூழ்கி மூன்று குழந்தைகள் இறந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த குழந்தைகள் 14 வயது விஷ்ணு, 12 வயது நிஹால் ராஜ் மற்றும் 16 வயது ஹர்ஷவர்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தசரா விடுமுறையின் போது, ​​சிறுவர்கள் அருகிலுள்ள ஏரியில் நீந்தச் சென்றிருந்த போது இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது சம்பவம் குறித்து அறிந்ததும், பாகேபள்ளி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்ளூர்வாசிகளின் உதவியுடன் உடல்களை […]