மாகாணசபைத் தேர்தல்: அரசின் யோசனைக்கு எதிரணி முழு ஆதரவு!
மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதற்குரிய யோசனையை அரசாங்கம் முன்வைத்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று அறிவித்தது. நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.சீ. அலவத்துவல இவ்வாறு அறிவித்தார். “ மாகாணசபைகளில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லை. ஆளுநர்கள் ஊடாகவே அவை நிர்வகிக்கப்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தவறு என்பதை நாம் ஏற்கின்றோம். அன்று தவறு […]













