ஐரோப்பா

பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் – இங்கிலாந்து வங்கி வட்டி விகிதத்தை குறைக்குமா?

  • November 19, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பணவீக்கமானது  கடந்த செப்டம்பர் மாதம் 3.8 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில் 3.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. எரிசக்தி விலையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் உணவு விலை பணவீக்கத்தில் ஏற்பட்ட மந்த நிலையின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய பணவீக்க நிலையை வரவேற்றுள்ள நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) வரவிருக்கும் வரவு செலவு திட்டத்தில் விலைகளைக் குறைக்க இன்னும் அதிகமாகச் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்து வருவதால் டிசம்பர் மாதத்தில் […]

பொழுதுபோக்கு

46 வயதில் முதல் குழந்தைக்கு “அப்பா”வாகினார் பிரேம்ஜி

  • November 19, 2025
  • 0 Comments

இசையமைப்பாளர், பாடகர், நடிகர், நகைச்சுவை என பல துறைகளில் கலக்கிக்கொண்டு முரட்டு சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜி அப்பாவாகிவிட்டார். கடந்த ஆண்டு இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் மனைவி கர்ப்பமானார். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனைவியின் வளைகாப்பு பங்க்‌ஷனை கிராண்ட் ஆக நடத்தி இருந்தார் பிரேம்ஜி. இந்த நிலையில், இன்று பிரேம்ஜி – இந்து தம்பதிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். 46 வயதில் […]

பொழுதுபோக்கு

ஜெயிலர் 2 படத்தில் இணைந்த பிரபல பாலிவூட் நடிகை…

  • November 19, 2025
  • 0 Comments

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வெற்றியடைந்து தற்போது பகுதி 2-க்கு தயாராகின்றது ஜெய்லர் படம். அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் ஜெயிலர் 2 படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இப்படத்தில் போலிவூட் நடிகை அபேக்‌ஷா போர்வல் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தியில் ‘உண்டேகி'(Undekhi), ‘ஹனிமூன் போட்டோகிராஃபர்’, ‘ஸ்லேவ் மார்க்கெட்’ ஆகிய வெப் தொடர்களில் மூலம் பிரபலமானவர் நடிகை அபேக்‌ஷா. இவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே […]

இலங்கை செய்தி

தயாசிறி ஜயசேகரவை கண்காணிக்க மூவர் கொண்ட குழு நியமனம்!

  • November 19, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் வட்டகல தாக்கல் செய்த முறைப்பாட்டை விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் 24 அன்று சபையில் நடந்த ஒரு சம்பவத்தை விசாரிக்க இந்தக் குழு நியமிக்கப்பட்டதாக சபாநாயகர் இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். துணை சபாநாயகர் ரிஸ்வி சாலி குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உபாலி பன்னிலகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார […]

இலங்கை செய்தி

தனது கல்வி தகமை குறித்து விளக்கமளித்த நாமல்!

  • November 19, 2025
  • 0 Comments

தனது பட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் தவறானவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச  கூறுகிறார். ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த சிறிது நேரத்திலேயே தனது பட்டம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டதாகவும், இந்த அரசாங்கம் பதவியேற்ற சில வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஒரு பி-அறிக்கையை சமர்ப்பித்து, எனது பட்டப்படிப்பை விசாரிக்க ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். “பல மாதங்களாக விசாரணைகள் நடந்து […]

செய்தி

உக்ரைனில் பரிசோதனை செய்யப்பட்ட வான்பாதுகாப்பு ஏவுகணையை தைவானுக்கு வழங்கும் அமெரிக்கா!

  • November 19, 2025
  • 0 Comments

அமெரிக்கா தைவானுக்கு ஏறக்குறைய 700 மில்லியன் டொலர் மதிப்புள்ள மேம்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை விற்பனை செய்வதை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த வான்பாதுகாப்பு ஏவுகணைகள் உக்ரைனில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா மட்டுமே இப்போது இந்த அமைப்பை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தைவானுக்கு வழங்கப்படும் 02 பில்லியன் டொலர் ஆயுத ஏற்றுமதியில் இந்த தொகுப்பும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. RTX ஆல் தயாரிக்கப்படும் இந்த வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம் […]

கருத்து & பகுப்பாய்வு

ஜேர்மனி வேலைவாய்ப்புகள் – அதிக தேவை உள்ள 06 தொழில்கள்!

  • November 19, 2025
  • 0 Comments

உலக நாடுகள் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான போக்கை பின்பற்றி வரும் நிலையில் ஜேர்மன், வெளிநாட்டவர்களை வரவேற்கிறது. அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகள் குடியேற்றக் கொள்கைகள கடுமையாக்கி வருவதால் புலம்பெயர்வு தொடர்பில் மக்கள் மத்தியில் தற்போது மனக்கவலைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஜேர்மன் உலகளாவிய தொழில்முனைவோர்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. அங்கு வேலைவாய்ப்புகளும் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் இலங்கையர்களுக்கும் கேள்வி உள்ளதாகவும் தெரிவிகப்படுகிறது. ஜேர்மனில் முக்கியமாக 06 தொழில்களுக்கு தற்போது […]

பொழுதுபோக்கு

41 வயதான நயனுக்கு விக்கி கொடுத்த விலை உயர்ந்த பரிசு

  • November 19, 2025
  • 0 Comments

நேற்றைய தினம் 41வது பிறந்தநாளை கொண்டாடிய தனது காதல் மனைவியான நடிகை நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் விலை உயர்ந்த பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது, நயனுக்கு 10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி பரிசளித்திருக்கிறார் விக்னேஷ் சிவன். ரோல்ஸ் ராய்ஸின் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்ட்ரே காரை பரிசளித்திருக்கிறார். அந்த கார் முன் நயன்தாரா மற்றும் தனது குழந்தைகள் இருவரும் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கூடவே, “எண்ணம் போல் வாழ்க்கை. […]

உலகம்

சீனாவில் உள்ள ஜப்பானிய குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை!

  • November 19, 2025
  • 0 Comments

ஜப்பான் மற்றும் சீனாவிற்கு இடையிலான இராஜதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவில் வாழும் ஜப்பானிய குடிமக்களின் பாதுகாப்பை பலப்படுத்த ஜப்பான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி நெரிசலான இடங்களை தவிர்க்குமாறு ஜப்பானியர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தைவான் ஜலசந்தியில் மோதல் ஏற்பட்டால், டோக்கியோ தனது இராணுவப் படைகளை நிலைநிறுத்தலாம் என்று ஜப்பானியப் பிரதமர் சானே தகைச்சி (anae Takaichi) அறிவித்ததை தொடர்ந்து  இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்க்க நேற்று ஜப்பானிய மூத்த அதிகாரி […]

உலகம் செய்தி

ஜப்பானில் பற்றி எரிந்த வீடுகள் – 170 பேர் வெளியேற்றம்!

  • November 19, 2025
  • 0 Comments

ஜப்பானில் உள்ள ஓய்டா (Oita) நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பகுதியில் வசித்து வந்த 170 பேர்  இன்று பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாகவும், 70 வயதுடைய நபர் ஒருவரை காணவில்லை எனவும் ஜப்பானின் தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. பலத்த காற்றின் காரணமாக தீ வேகமாக பரவியதாக கூறப்படுவதுடன், 20 மணிநேர  போராட்டத்தை […]