உலகம் செய்தி

துபாயில் உயிரிழந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர்

  • December 8, 2025
  • 0 Comments

ஐக்கிய அரபு எமிரேட்ஸில்(United Arab Emirates) வசிக்கும் இந்திய தொழிலதிபர் தேவேஷ் மிஸ்திரி துபாயில்(Dubai) காலமானதாக கல்ஃப் நியூஸ்(Gulf News) செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கின் டிஜிட்டல் வடிவமைப்புத் துறையில் நன்கு அறியப்பட்ட நபராகவும், பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் தேவேஷ் மிஸ்திரி. ‘சூப்பர்மேன்’ என்று அன்பாக அழைக்கப்படும் மிஸ்திரி, 2011ல் அமோல் கடமுடன்(Amol Kadam) இணைந்து ரெட் ப்ளூ ப்ளர் ஐடியாஸ்(Red Blue Blur Ideas) என்ற டிஜிட்டல் நிறுவனத்தை நிறுவினார். இந்நிலையில், நிறுவனம் […]

இந்தியா செய்தி

பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் விடுதலை

  • December 8, 2025
  • 0 Comments

2017ம் ஆண்டு நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பை விடுவிக்க கேரள(Kerala) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மலையாள நட்சத்திரத்தின் தொடர்பை நிரூபிக்க அரசு தரப்பு தவறவிட்டதாக கூறி எர்ணாகுளம்(Ernakulam) முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது இந்நிலையில், தீர்ப்புக்குப் பிறகு நீதிமன்றத்தில் பேசிய நடிகர் திலீப், “இது எனக்கு எதிரான சதி. எனக்கு உதவிய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 2017ல் ஒரு பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்டு தாக்கப்பட்டதைத் […]

ஐரோப்பா

லண்டன் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!

  • December 8, 2025
  • 0 Comments

லண்டன் ஹீத்ரோவுக்குச்(London Heathrow) சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) விமானம் (BA1443) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே எடின்பர்க் (Edinburgh) விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மேற்படி விமானம் திருப்பிவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் A320 விமானத்தில் இருந்த விமானிகள் 7700 என்ற அவசர சப்தக் குறியீட்டை வெளியிட்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு சமிக்ஞை செய்துள்ளனர். இதனையடுத்து விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் எடின்பர்க் விமான நிலையத்தின் செயற்பாடுகளை 40 நிமிடம் நிறுத்திவைத்துவிட்டு குறித்த விமானத்தை […]

ஐரோப்பா

(update) ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை – பல பகுதிகளில் மின் துண்டிப்பு!

  • December 8, 2025
  • 0 Comments

ஜப்பானில்  7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்  இன்று பதிவாகியதை தொடர்ந்து பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமோரியின் (Aomori) வடக்குப் பகுதியில் உள்ள ஒரு துறைமுகத்தை முதல் சுனாமி அலை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றொரு அலை ஹொக்கைடோ (Hokkaido) பிராந்தியத்தில் உள்ள உரகாவா நகரத்தை அடைந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு அலைகளும் 40 செ.மீ. உயரத்தை கொண்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அமோரியில் (Aomori) ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. டோஹோகு […]

இலங்கை

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் : இலங்கைக்கு பாதிப்பா?

  • December 8, 2025
  • 0 Comments

ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த நிலநடுக்கம் இலங்கை நேரப்படி மாலை 7.45 மணிக்கு ஏற்பட்டது, இதனால் சுனாமி அல்லது பிற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்கள் பீதியடையவோ அல்லது உறுதியற்ற போலியான செய்திகளைப் பரப்பவோ வேண்டாம் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

உலகம்

பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் ஈரானியர்கள்!

  • December 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஈரானியர்களை ஏற்றிச் செல்லும் இரண்டாவது விமானம் இன்று அமெரிக்காவை விட்டு வெளியேறியுள்ளதாக  ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வொஷிங்டனில் இருந்து நூற்றுக்கணக்கான கைதிகள் ஈரானுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டக் காரணங்கள் மற்றும் குடியேற்ற விதிமுறைகளை மீறியதால் ஈரானியர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏறக்குறைய 55 ஈரானியர்கள் நாடுகடத்தப்பட்டதை ஈரானிய வெளியுறவு அமைச்சக அதிகாரி மொஜ்தபா சாஸ்தி கரிமி (Mojtaba Shasti Karimi) உறுதிப்படுத்தியுள்ளார். தெஹ்ரானின் (Tehran) அணுசக்தி தளங்கள் மீது […]

செய்தி விளையாட்டு

இந்திய அணிக்கு அபராதம் விதித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்

  • December 8, 2025
  • 0 Comments

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 3ம் திகதி ராய்ப்பூரில்(Raipur) நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மெதுவாக பந்து வீசியதற்காக இந்திய அணிக்கு அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேரக் கொடுப்பனவுகள் பரிசீலிக்கப்பட்ட பிறகு கே.எல். ராகுலின் அணி இலக்கை விட […]

இலங்கை

தொலைத்தொடர்பு கேபிள்களை சேதமாக்க வேண்டாம் : பொதுமக்களிடம் கோரிக்கை

  • December 8, 2025
  • 0 Comments

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவையை மீட்டெடுக்க ஒத்துழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவந்த சீரற்ற காலநிலையால் ஒரு சில பகுதிகளில் நிலத்தடியிலிருந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் வெளிப்பட்டுள்ளன. அவ்வாறு நிலத்திலிருந்து வெளியே தெரிந்த தொலைத்தொடர்பு கேபிள்களை சேதப்படுத்தல், அறுத்து எடுத்துச் செல்லுதல் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இத்தகைய சம்பவங்களை தவிர்ப்பதற்கு, பொதுமக்களுக்கு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்துமாறு டயலொக் ஆசியாடா நிறுவனம் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அனர்த்தங்களுக்குப் பின்னர் சேதமடைந்த வீதிகளை […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய அச்சுறுத்தல் – நீருக்கடியில் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் பிரித்தானியா!

  • December 8, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நீருக்கடியில் பாதுகாப்பை பலப்படுத்த   பல மில்லியன் பவுண்டுகள் செலவில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கவுள்ளதாக ரோயல் கடற்படை  அறிவித்துள்ளது. அட்லாண்டிக் பாஸ்டன் (Atlantic Bastion) என்று அழைக்கப்படும் இந்த திட்டம் கடலுக்கடியில் கேபிள்கள் மற்றும் குழாய்களைப் பாதுகாத்தல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பாரம்பரிய போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை பாதுகாக்க  உறுதுணையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரஷ்ய உளவு கப்பல் நடவடிக்கைகளால் பால்டிக் கடல் கேபிள்கள்  சேதமடைந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

உலகம் செய்தி

ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • December 8, 2025
  • 0 Comments

ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அமோரி மற்றும் ஹொக்கைடோ கடற்கரையில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் 3 மீட்டர்(10 அடி) வரை சுனாமி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.