ஜப்பானில் தண்டவாளத்தில் பணிப்புரிந்தவர்கள் மீது அதிவேக ரயில்மோதி விபத்து
ஜப்பானில் ரயில் தண்டவாளத்தில் களைகளைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் அதிகவே ரயில் மோதி உயிரிழந்துள்ளனர்.
இந்த துயரச் சம்பவம் இன்று டோக்கியோவிற்கு வடக்கே உள்ள ஷின்-கனுமா Shin-Kanuma ரயில் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
டோக்கியோ நோக்கிச் சென்ற ஸ்பேசியா அதிவேக ரயில் மோதியே இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேநேரம் குறித்த நேரத்தில் பணியில் இருந்த மேலும் ஆறுபேர் பாதுகாப்பாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நெருங்கிக்கொண்டிருந்தபோது தொழிலாளர்கள் ஏன் அந்த இடத்தை விட்டு வெளியேறவில்லை என்பதும், கண்காணிப்பாளர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





