இலங்கையின் பிரபல பாடகி நந்தா மாலினி காலமானார்
இலங்கையின் புகழ்பெற்ற மூத்த பாடகியும் இசைக்கலைஞருமான கலாசூரி நந்தா மாலினி (82) நாவல பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
1943 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 23 ஆம் திகதி பிறந்த இவர், கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களாக இலங்கை இசைத்துறையில் மிக முக்கிய மற்றும் செல்வாக்குமிக்க பாடகியாகத் திகழ்ந்தார்.
சமூகப் பிரச்சினைகள், மனித உறவுகள் மற்றும் அன்றாட வாழ்வியலை மையமாகக் கொண்ட இவரது பாடல்கள் மூலம், இலங்கை இசையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான குரலாக மாறினார். குறிப்பாக, தனது கலை மூலமாகச் சமூக அவலங்கள் மற்றும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தமைக்காக அவர் நாடு தழுவிய ரீதியில் பெருமளவில் போற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.





