இலங்கை

சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

அடுத்த பெரும் போகத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு, அவர்களின் நிலத்தை தயார் செய்ய ஏக்கருக்கு 20,000 ரூபாய்.வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை, மொனராகலை, அநுராதபுரம், அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு, திருப்பிச் செலுத்த வேண்டிய தேவையில்லாத தொகையாக இந்த நிதி வழங்கப்படும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சோளச் செய்கைக்குத் தேவையான அனைத்து விதைகள் மற்றும் உரங்களும் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கால்நடை தீவனத்தை தயாரிப்பதற்கு தேவையான சோளம் பற்றாக்குறையால் பால், முட்டை மற்றும் கோழிக்கறி உற்பத்தி இந்த வருடத்தில் குறைந்துள்ளதாக தெரிவிக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, சோள உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்