இலங்கை புகைப்பட தொகுப்பு

ஐ.எப். தமிழ் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம்

மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை, உலக தமிழர்களுக்கான தகவல் சேவை மற்றும் ஐ.எப். தமிழ் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் எத்தாபெந்திவெவ பகுதியில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட எத்தாபெந்திவெவ விகாரையில் இடம்பெற்றது.

இன்று (19) காலை 8:00 மணி முதல் 3 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

குறித்த மருத்துவ முகாமில் இலவச கண் பரிசோதனை, இரத்த பரிசோதனை, பல் பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களுக்கான விசேட பரிசோதனை , ஆயுர்வேத வைத்திய சேவை மற்றும் விசேட நோய்களுக்கான சிகிச்சைகள், ஆலோசனைகள் என்பன இந்த வைத்திய முகாமில் இடம்பெற்றது.

மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி அதீஷ சத்துரங்க அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.எப் தமிழ் ஊடகவலயமைப்பின் அனுசரணையில் இவ்வைத்திய முகாம் இடம் பெற்றது.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தின் வைத்தியர்களான எஸ். சௌந்தராஜன் மற்றும் என். ரகுராம் மற்றும் மொரவெவ பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் கே. சத்தியபிரியா, அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். மணிவண்ணன் , நிர்வாக கிராம உத்தியோகத்தர் என் சுந்தரேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த இலவச வைத்திய முகாமிற்கு மொரவெவ விமானப்படை வீரர்கள், சிவில் பாதுகாப்பு தினைகளை வீரர்கள் வைத்தியசாலை தரப்பினருக்கு சரீர உதவிகளை வழங்கியதும் ,சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் நலன் கருதி ஐ.எப் தமிழ் ஊடக வலையமைப்பினால் காலை சிற்றூண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 32 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content