ஈரானுக்கு பதிலடி – தூதர்களை வெளியேற்றும் பிரான்ஸ்
தெஹ்ரானில் இருந்து இரண்டு பிரெஞ்சு தூதர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பதிலடியாக பிரான்ஸில் இருந்து இரு ஈரானிய தூதர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எக்ஸ் தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் , இந்த சகிக்க முடியாத செயலுக்கு விளைவுகள் இருக்கும் என்று நான் அறிவித்திருந்தேன். அதன்படியே நடந்துள்ளது. பிரான்சில் உள்ள இரண்டு ஈரானிய தூதர்கள் மிக விரைவில் வெளியேற்றப்படுவார்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம், தெஹ்ரானில் உள்ள ஈரானிய பாதுகாப்பு சேவைகளால் பிரெஞ்சு தூதரகத்தின் இரண்டு ஊழியர்கள் தடுத்து வைக்கப்பட்டு, உடல்ரீதியாக அச்சுறுத்தப்பட்டதாக பிரெஞ்சு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாரிஸில் உள்ள ஈரானிய தூதரகப் பொறுப்பாளரை பாரோட் வரவழைத்திருந்தார்.
இந்நிலையில் பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் ஈரானுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



