ஆசியா

தென்சீனக் கடலில் முதல் முறையாக கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கிய நான்கு நாடுகள்

பிலிப்பீன்ஸ், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவை புதன்கிழமை (ஆகஸ்ட் 7), தென்சீனக் கடலில் முதல்முறையாகக் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.

படையினருக்கு இடையிலான கூட்டுச் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவது இதன் நோக்கம் என்று அந்த நான்கு நாடுகளின் ராணுவங்கள் தெரிவித்தன.

இரண்டு நாள் கூட்டுப் பயிற்சியில் கடற்படைகளும் விமானப் படைகளும் பங்கேற்கும்.

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதியில் சென்ற வாரம் பிலிப்பீன்சும் ஜப்பானும் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டன.முன்னதாக, பிலிப்பீன்சின் நட்பு நாடான அமெரிக்கா, ஜூன் மாதத்தில் இத்தகைய கூட்டு ராணுவப் பயிற்சிகளை மணிலா, தோக்கியோ போன்றவற்றுடன் இணைந்து மேற்கொண்டது.

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதியில் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரம் அதன் வான்வெளியில் விமானப் போக்குவரத்துச் சுதந்திரம் ஆகிய உரிமைகளை நிலைநிறுத்த கூட்டுப் பயிற்சி இடம்பெறுவதாக நான்கு நாட்டு ராணுவங்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிலாவிலிருந்து 200 கடல்மைல் சுற்றுவட்டாரமான அதன் தனிப்பட்ட பொருளியல் பகுதிக்குள் கடற்படைகளும் விமானப் படைகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஒத்துழைப்பையும் இணைந்து செயல்படும் திறனையும் மேம்படுத்த இது உதவும் என்று அது குறிப்பிட்டது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்