இலங்கை

திருகோணமலையில் காணி உரிமைக்கான மாவட்ட செயலணி ஆரம்பம்!

  • May 24, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு காரணிகளால் காணிகளை இழந்த மக்கள் ஒன்றிணைந்து “காணி உரிமைக்கான திருகோணமலை மாவட்ட செயலணி – TiDALR” எனும் புதிய அமைப்பை ஆரம்பித்துள்ளனர். இச்செயலணியின் தலைவராக திரு. ஏ.ஏ. சிபுனிஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், செயலாளராக திருமதி. எஸ். ஸஹீலா மற்றும் உபதலைவராக திரு. நா. சண்முகம் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர். Human Elevation Organization நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான K. Nihal Ahamed அவர்களின் தலைமையில், திருகோணமலை சர்வோதய கூட்டமண்டபத்தில் மே மாதம் […]

இலங்கை

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

திருகோணமலை-கோமரங்காடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த நபரொருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 65 வயதுடைய ஹேரத் ஹமிகே விஜேரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒட்டிச்சங்குளத்தில் தேன் எடுப்பதற்காக சென்றபோது யானை தாக்கியதாக தெரிய வந்துள்ளது. இன்று (24) சுமார் 3.55 மணியளவில் கோமரங்கடவல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல […]

இலங்கை

All Ceylon Emergency Vehicle Service திருகோணமலை மாவட்ட இணைப்பாளர்கள் சந்திப்பு!!

  • April 26, 2026
  • 0 Comments

All Ceylon Emergency Vehicle Service  இன் மாவட்ட  இணைப்பாளர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு இன்று (25) Nilaveli Royal Paradise விருந்தகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது இதுவரை செய்யப்பட்ட சேவைகள் மற்றும் அதன் மூலம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது. திருகோணமலை வைத்தியசாலையில் மரணம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஜனாஸாவை குளிப்பாட்டல் மற்றும் கபன் இடல் செய்வதற்கான மைய்யத் (Mayyath) வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்தும் பேசப்பட்டது. […]

இலங்கை

திருகோணமலையில் நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கண்காட்சி – பலரும் பங்கேற்பு!

  • October 22, 2025
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிராந்தியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் பொதுமக்களுக்கு நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிதியறிவுக் கண்காட்சி இன்று (22) இடம்பெற்றது. இதனை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ .ஜீ.எம்.ஹேமந்தகுமார பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இலங்கை மத்திய வங்கியினால் பொதுமக்களுக்கு நிதியியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த கண்காட்சியானது கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கி திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த […]