ஈரானில் வணிக வளாகத்தில் தீவிபத்து – 08 பேர் உயரிழப்பு!
ஈரானின் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானின் அண்டிஷே நகரில் உள்ள அர்கவான் (Arghavan) வணிக வளாகத்தில் இந்த தீவிபத்து நேர்ந்துள்ளது.
கட்டிடத்தின் மீது இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய உறை காரணமாக தீ வேகமாகப் பரவியதாக உள்ளூர் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீவிபத்துக்கான காரணத்தை அறிய அதிகாரிகள் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
அதேநேரம் தற்போது ஈரானில் இடம்பெற்று வரும் போருக்கும் இந்த தீவிபத்திற்கும் தொடர்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




