இலங்கை

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை – ஏறாவூருக்கு துபாய் நாட்டு பிரதிநிதிகள் விஜயம்

ஏறாவூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த துபாய் நாட்டின் உதவியில் அமைச்சர் நசீர் வேண்டுகோளில் பல்வேறு திட்டங்கள் அமுல்

சுற்றாடல் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு இணைத்தலைவருமான அல்ஹாஜ் நசீர் அஹமத் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியின் பயனாக துபாய் நாட்டு உதவியில் ஏறாவூர் பிரதேச வறிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம் ஏறாவூர் பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல சுய தொழில் திட்டங்கள் அமைச்சர் நசீர் அகமட்டினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

இத்திட்டங்களின் திட்டமிடுதலை மேற்கொள்ளும் பொருட்டு அமைச்சர் நசீர் அகமதின் வேண்டுகோளின் பேரில் துபாய் நாட்டுப் பிரதிநிதிகள் நேற்று ஏறாவூர் பகுதிக்கு விசேட ஹெலிகாப்டர் மூலம் வருகைதந்தனர். ஏறாவூர் பிரதேசத்தின் எல்லைப்புறகிராம பிரதேசங்களுக்கு சென்று மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து மக்களுடன் கலந்துரையாடி தேவைகள் பற்றி கேட்டு அறிந்து கொண்டனர்.

இத்திட்டத்தின் ஊடாக பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு கோழி ,ஆடு, மாடு வளர்ப்பு விவசாய செய்கைகள் மீன் வளர்ப்பு உட்பட பல்வேறு சுய தொழில் திட்டங்கள் பற்றி பிரதேச மக்களால் தனது கோரிக்கைகள் துபாய் நாட்டுப் பிரதிநிதிகளுக்கு முன்வைக்கப்பட்டன.

இந்த துபாய் நாட்டு உதவித் திட்டத்தில் ஏற்கனவே அமைச்சர் நஷீர் அஹமட்டின் வேண்டுகோளில் மேற்கொள்ளப்பட்டு வந்த திட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றியும் துபாய் நாட்டுப் பிரதிநிதிகள்நேரில் கண்டறிந்ததுடன் அதன் வளர்ச்சி பற்றியும் விசேட கலந்துரையாடல்களை நடாத்தினர். இதேவேளை துபாய் நாட்டுப் பிரதிநிதிகள் ஏறாவூர் பொதுச்சந்தை பகுதிக்கு விஜயம் செய்து பொதுச்சந்தை பகுதியில் தொழுகைக்கான பள்ளிவாசல் கட்டிட நிர்மாணம் மற்றும் பொதுச் சந்தையின் வளர்ச்சி பற்றியும் கலந்துரையாடினர்

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content