ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்!
ஐரோப்பாவின் மிகப்பெரியதும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளதுமான ஸபோரிஷியா (Zaporizhzhia ) அணுமின் நிலையம் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த தாக்குதலால் முக்கிய உபகரணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என ரஷ்ய தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனிய படைகள் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி தாக்குதல்களை முன்னெடுத்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதலை திட்டமிட்ட சதி என ரோசாட்டமின் (Rosatom) தலைவர் அலெக்ஸி லிகாச்சேவ் ( Alexei Likhachev) தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த தாக்குதலை தங்கள் படைகள் முன்னெடுக்கவில்லை என உக்ரைன் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





