ஐரோப்பா

பாரிஸில் கால்பந்து இரசிகர்களுக்கு இடையே வெடித்த மோதல்! பலர் கைது!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் கால்பந்து தொடருக்கான இறுதிபோட்டி நேற்று நடைபெற்றது. இதில் அர்செனலுக்கு எதிராக பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) அணி வெற்றிப்பெற்றது.

இதனைத் தொடர்ந்து போட்டியை காணவந்த கால்பந்து இரசிகர்களுக்கு இடையே கலவரம் வெடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு பாரிஸில் உள்ள PSG-யின் பார்க் டி பிரின்சஸ் மைதானத்தைச் சுற்றி பதட்டமான சூழல்களும், சிறு மோதல்களும் ஏற்பட்டதாக பொலிஸார் விவரித்துள்ளனர்.

கலவரத்தை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக  130  பேர் தடுத்துவைக்கப்பட்டதாகவும், 45 பேர் காவலில் எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன்  கண்ணீர்புகைக் குண்டும் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளும் இரத்து செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் 06 வாகனங்களும் இரண்டு வணிக நிறுவனங்களும் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியை முன்னிட்டு பாரிஸ் முழுவதும் 22,000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!