அறிந்திருக்க வேண்டியவை

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து – வெளியான அதிர்ச்சி தகவல்

இன்றைய அவசர உலகில் நிதானமாகச் சமைத்துச் சாப்பிட முடியாதவர்கள் உடனே தேடிப்பிடித்து உண்ணக்கூடிய உணவாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் காணப்படுகின்றன.

ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவு உண்மையில் உடலுக்கு ஏற்றதா என்பது தொடர்பில் தீவிரமான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அந்த ஆய்விற்கமைய, பதப்படுத்தப்பட்ட உணவை அடிக்கடி உண்ணாதவரைக் காட்டிலும் அதனை அடிக்கடி உண்பவருக்கு மன உளைச்சல் அல்லது பதற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அறிவாற்றலும் குறைய வாய்ப்பிருப்பதாகக் கூறுகிறது Harvard பல்கலைக்கழக ஆய்வு.

“பதப்படுத்தப்பட்ட உணவு வகை பெரும்பாலும் ஆரோக்கியமற்றவை. அவற்றை அதிகம் சாப்பிட்டால் உடலில் நோய்கள் பெருகும்” என பல்கலையின் ஊட்டச்சத்து தொற்றுநோயியல் பேராசிரியர் Frank Hu தெரிவித்துள்ளார்.

“உணவுப்பழக்கம் மனிதர்களின் மனநிலையைப் பாதிப்பதில்லை. ஆனால் அது பாதிக்கலாம் என்ற தலைகீழான உண்மையும் இருக்கிறது.

மன உளைச்சல் அல்லது பதற்றம் ஏற்படும்போது ஒருவர் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிட முற்படுவார். குறிப்பாக அதிகச் சீனி அல்லது ரசாயனச் சுவையூட்டிகள் கொண்ட உணவைத் தேடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.

You cannot copy content of this page

Skip to content