ஐரோப்பா

வெள்ளைமாளிகையில் கொக்கைன் கண்டுப்பிடிக்கப்பட்ட விவகாரம் : கையில் எடுத்த ஜனாதிபதி போட்டியாளர்கள்!

வெள்ளை மாளிகையில், கொக்கைன் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்ட விவகாரம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சியை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

அதாவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அதேபோல், ஜனாதிபதி வேட்பாளர் ரான் டிசாண்டிஸ் ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஜோ பைடனும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையே தற்போது ஜோ படைனின் அரசாங்கத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.

போதைப்பொருள் மீட்கப்பட்டபோது அதிபர் பைடன் அங்கு இருக்கவில்லை என்பதும், அது எவ்வாறு வெள்ளை மாளிக்கைக்கு கொண்டுவரப்பட்டது என்பதையும்  ஜனாதிபதி வேட்பாளர்கள் கையில் எடுத்துள்ளனர்.

இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ள டொனால்ட் ட்ரம்ப், “ஓவல் அலுவலகத்திற்கு மிக அருகில் கண்டுப்பிடிக்கப்பட் கொக்கைன் போதைப்பொருள் அதிபர் பயன்பாட்டிற்கு அன்றி வேறு யாருக்காகவாவது கொண்டுவரப்பட்டது எனக் கூறினால் யாரேனும் நம்புவார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் இந்த செய்தி விரைவில் போலி செய்தி எனக் குறிப்பிடப்பட்டு அழிந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். இது கொக்கைன் அல்ல. ஆஸ்பிரின் என்றும் இதை பயன்படுத்துவது பொதுவானது என்றும் கூறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் 2024 ஜனாதிபதி வேட்பாளரும் புளோரிடாவின் தற்போதைய ஆளுநருமான டிசாண்டிஸும் அமெரிக்க அதிபரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கோகோயின் இருப்பது குறித்து பிடன் நிர்வாகத்தை விமர்சித்தார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content