உலகம்

பிராந்தியத்தில் பாதுகாப்பின்மையை உருவாக்கும் சீனா – முக்கிய தருணத்தில் தைவான் குற்றச்சாட்டு!

பிராந்தியத்தில் பாதுகாப்பின்மையை உருவாக்குவதாக சீனா மீது தைவான் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க – சீன பிரதிநிதிகளின் இன்றைய சந்திப்பில் தைவான் குறித்த  பேச்சுவார்த்தை முக்கிய இடத்தை பெறும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தைவான் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் மிஷேல் லீ, சீனாவின் இராணுவ அச்சுறுத்தல் பிராந்தியத்தில் பாதுகாப்பின்மையை உருவாக்குவதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

“தேசிய பாதுகாப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவதும், பயனுள்ள கூட்டுத் தடுப்பு நடவடிக்கைகளுமே பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான மிக முக்கியமான காரணியாகும்.”

“சர்வாதிகார விரிவாக்கத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களை” நிர்வகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவை என்று அவர் கூறினார்.

இதேவேளை இந்நிலையில் பெய்ஜிங் இந்த விவகாரத்தை “மிக முக்கியமான பிரச்சினை” என்று விவரித்ததுடன், இது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதலுக்கு ஒரு சாத்தியமான காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!