அமெரிக்காவின் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் – ஜே.டி வான்ஸ் எச்சரிக்கை
ஈரானிய இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக அப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ நிலைகளைத் தாக்கியதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை அறிவித்துள்ளது,
ஈரானின் இஸ்லாமிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் இப்ராஹிம் அஜிஸி ( Ebrahim Azizi) அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு உறுதியளிக்கவில்லை என்றும், பழி போடும் விளையாட்டு இனி எடுபடாது என்றும் கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், பேச்சுவார்த்தைகளின் நடுவில் அமெரிக்கா மீண்டும் ஈரானைத் தாக்கியுள்ளது.
தோல்வியடைந்த அமெரிக்க ஜனாதிபதி, பேச்சுவார்த்தை அல்லது போர் நிறுத்தத்தின் கொள்கைகளுக்கு எந்த அர்ப்பணிப்பும் இல்லை என்பதைக் காட்டியுள்ளார்.
போர் நிறுத்தத்தின் இந்த பொறுப்பற்ற மீறல், எப்போதும் போல, அவர்கள் தரப்பில் பின்வாங்கலுக்கும் வருத்தத்திற்கும் வழிவகுக்கும். பழி போடும் விளையாட்டு இனி எடுபடாது,” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் இட்டுள்ள பதிவொன்றில், “ஈரான் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
நாங்கள் அதை மதித்துள்ளோம். புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து அவர்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவர்கள் தொலைபேசியில் அழைக்கலாம். ஆனால் வன்முறைக்கு வன்முறையே பதிலடி கொடுக்கப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோதல் போக்கு மத்தியக்கிழக்கில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




