லெபனானில் போர் பதற்றம் தீவிரம் – இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 2000 இற்கும் மேற்பட்டோர் பலி
லெபனான் நாட்டில் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சுமார் 2,896 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மார்ச் 2ஆம் திகதி முதல் இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உயிரிழந்தவர்களில் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதே தாக்குதல்களில் 8,824 பேர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போரின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.





