ஐரோப்பா

இங்கிலாந்தில் கக்குவான் இருமலால் மற்றொரு குழந்தை உயிரிழப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!

இங்கிலாந்தில் கக்குவான் இருமலினால் மற்றொரு குழந்தை உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி (UKHSA) வெளியிட்ட தகவலின் அடிப்படையில் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களைப் பாதித்து மிக எளிதாகப் பரவும் கக்குவான் இருமல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.

இங்கிலாந்தில் இதுவரை 10 பேர் தொற்றுநோயால் இறந்துள்ளனர். தொற்றுநோய்களின் எண்ணிக்கையும் 10,000 க்கு மேல் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு மே மாதத்தில் இங்கிலாந்தில் கக்குவான் இருமல் வழக்குகள் உச்சத்தை எட்டியதாகவும், ஜூன் மாதம் வரை 2,427 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான வழக்குகள் 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் இனங்காணப்பட்டபோதிலும் மூன்று மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் 300 க்கும் மேற்பட்டவர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் பெரும்பாலான சிக்கல்களை எதிர்கொள்வதாக நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்