அறிந்திருக்க வேண்டியவை

வியக்கவைக்கும் பாம்புகளின் தோட்டம்! படையெடுக்கும் சுற்றுல்லா பயணிகள்

உலகில் பல்வேறு வகையான தோட்டங்கள் உள்ளன. மலர்த்தோட்டம், பழத்தோட்டம், காய்கறி தோட்டம் என விதவிதமான தோட்டங்களை உருவாக்கி, அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைகளில் விற்பனை செய்வார்கள். ஆனால் வியட்நாமில் ஒரு அரிய வகை தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தில் உள்ள மரங்கள் எந்த விதமான பழங்களையும் காய்களையும் தருவதில்லை. மாறாக அவற்றின் கிளைகள் பாம்புகளால் நிறைந்துள்ளன.

தோட்டத்தில் பாம்புகள் மற்றும் பூச்சிகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த வியட்நாமிய தோட்டத்தில் பாம்புகள் பழங்கள் போல் வளர்க்கப்படுகின்றன.

வியட்நாமின் Trại rần Đồng Tâm, இல் உள்ள ஒரு பண்ணையில் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. மற்ற பண்ணைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிடப்படுவது போல் இங்கும் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன.

இந்தப் பண்ணையில் மருத்துவப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு 400க்கும் மேற்பட்ட விஷ பாம்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றின் விஷத்தில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. அதனுடன், அவற்றின் விஷத்தைக் குறைக்கும் மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.

டோங் டாம் பாம்புப் பண்ணை ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
இந்த தோட்டத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.

இந்த வகையான தோட்டத்தைப் பற்றி பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது, இல்லையா? இந்த தோட்டம் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று முக்கிய சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.

You cannot copy content of this page

Skip to content