இலங்கை செய்தி

இலங்கை ரூபா மதிப்பு வீழ்ச்சியால் 48 பில்லியன் ரூபா கூடுதல் செலவு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிந்ததன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலுக்காக, கூடுதலாக 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, பொது நிதிக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சரிந்ததன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதலுக்காக, கூடுதலாக 48 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக, பொது நிதிக் குழுவின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் முன்னிலையாகிய, இலங்கை​​ரூபாயின் மதிப்பு சரிந்ததன் காரணமாக கடந்த ஆண்டு வெளிநாட்டுக் கடன் சேவைக்காகச் செலவிடப்பட்ட கூடுதல் தொகை குறித்து பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சின் பொதுக் கடன் மேலாண்மை அலுவலகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் உதேனி திலகரத்ன,

“48 பில்லியன் ரூபா கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

ஒரு அமெரிக்க டொலருக்கு ரூ. 20 என்ற நாணய மாற்று விகித வேறுபாட்டுடன், சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலரைத் திருப்பிச் செலுத்தியுள்ளோம் என்ற அடிப்படையில் இந்தக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, 2025-ஆம் ஆண்டில் ரூபா மதிப்பு வீழ்ச்சியினால், 48 பில்லியன் ரூபா கூடுதல் செலவினம் ஏற்பட்டது. என்று தெரிவித்துள்ளார்.

2025-ஆம் ஆண்டில் வெளிநாட்டுக் கடன் சேவைக்காகத் தேவைப்படும் கூடுதல் 600 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து ஹர்ஷ டி சில்வாவும் கேள்விகளை எழுப்பினார்.

இது குறித்த விரிவான அறிக்கையை கூடிய விரைவில் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை